நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது இ-பாஸ்போர்ட்.. நிஜமா இதில் 'சிப்' இருக்குது பாஸ்
டெல்லி: அதி நவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக லோக்சபாவில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.
கேள்வி நேரத்தின்போது, இதுதொடர்பாக அவர் கூறுகையில், இ-பாஸ்போர்ட் போலி பாஸ்போர்ட்டுகளை ஒழிக்க உதவும், ஏனெனில் இதில் எலக்ட்ரானிக் சிப் இருக்கும் என்றார் அவர். பிரிண்ட் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டில் இருக்கும் அம்சங்கள், சிப்பிலும் பதிவு செய்யப்பட்டிருக்கும். நாசிக் நகரிலுள்ள ஐஎஸ்பி நிறுவனத்திற்கு இந்த வகை பாதுகாப்பு நிறைந்த பாஸ்போர்ட் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

அந்த நிறுவனம் டெண்டர் விட்டுள்ளதாகவும், அந்த பணிகள் முடிந்த பிறகு புதிய வகை பாஸ்போர்ட்டுகள் ரெடியாகும் எனவும் அவர் தெரிவித்தார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த வி.கே.சிங், கடந்த 3 வருடங்களில் வெளிநாடுகளில் 78 இந்தியர்கள் கடத்தப்பட்டதாகவும், அதில் இதுவரை 33 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய 2000 ரூபாய் நோட்டில் சிப் இருக்குது என வாட்ஸ்அப்பில் வதந்தி பரவியதும், அப்படி இல்லை என ஆர்.பி.ஐ மறுத்ததும் உங்களுக்கு நினைவு இருக்கலாம். ஆனால், லோக்சபாவிலேயே அமைச்சர் பாஸ்புக்கில் சிப் வைக்கப்போவதாக கூறியுள்ளதால், இது பொய் அல்ல என்பது மட்டும் உறுதி மக்களே.












Click it and Unblock the Notifications