எம்.பி.க்களின் சம்பளம் அப்படியே 'டபுள்' ஆகிறது?: ஊதியக் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு
டெல்லி: எம்.பி.க்களின் சம்பள உயர்வு குறித்து தீர்மானிக்க 3 பேர் கொண்ட சம்பளக் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது இந்திய எம்.பி.க்களுக்கு மாதச் சம்பளமாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது தவிர நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களின் போது அவர்களது வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் நாளொன்றிற்கு ரூ. 2 ஆயிரம் தரப்படுகிறது.
இவை மட்டுமின்றி தொகுதி நிதியாகவும் மாதம் ரூ. 45 ஆயிரம் தரப்படுகிறது. இதில், ரூ. 15 ஆயிரம் ஸ்டேஷனரி பொருட்கள் வாங்குவதற்கும், மீதமுள்ள ரூ. 30 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் ஆகும்.

இவை தவிர, எம்.பிக்களுக்கு அரசு செலவில் தங்குவதற்கு இடம், விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து செலவுகள், தொலைபேசி வசதிகள் உள்ளிட்டவையும் செய்து கொடுக்கப்படுகின்றது. சொந்தமாக வாகனம் வாங்க ரூ. 4 லட்சம் வரை கடன் வசதியும் செய்து தரப்படுகிறது.
இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் இம்மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அரசு தலைமை கொறடா மாநாடு நடைபெற உள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் நாடாளுமன்ற மற்றும் சட்டசபைகளின் அனைத்துக் கட்சி கொறாடாக்களும் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் எம்.பி.களின் சம்பளம், தினசரி படி, ஓய்வதியம் குறித்து பரீசிலிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே, எம்.பிக்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை இரண்டு மடங்கு அதிகரிக்கவும், எம்.பிக்களுக்கான சம்பள நிர்ணயத்தை குறிப்பிட்ட காலக்கெடுவில் திருத்தியமைக்கவும் நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
இதையடுத்து எம்.பி.க்களின் சம்பள உயர்வு குறித்து தீர்மானிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடைசியாக 2010ம் ஆண்டு எம்.பிக்களின் சம்பளம் திருத்தியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
37 வளரும் நாடுகளின் எம்.பிக்களின் சம்பளத்தை ஆய்வு செய்தால் இஸ்ரேலில்தான் அதிக அளவில் சம்பளம் தருகிறார்கள். அதாவது அங்கு மாதச் சம்பளமாக ரூ. 6.16 லட்சம் பெறுகிறார்கள் எம்.பிக்கள்.
குறைந்த அளவிலான சம்பளத்தைப் பெறுவது துனிஷீயாவைச் சேர்ந்தவர்கள். இவர்களின் மாதச் சம்பளம் ரூ. 7952 மட்டுமே ஆகும்.
துனிஷியா, வெனிசூலா, இலங்கை, நேபாளம், ஹைதி, பனாமா ஆகிய நாட்டு எம்.பிக்கள் இந்திய எம்.பிக்களை விட குறைந்த சம்பளத்தைப் பெறுகிறார்களாம்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications