எம்.பி.க்களின் சம்பளம் அப்படியே 'டபுள்' ஆகிறது?: ஊதியக் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு
டெல்லி: எம்.பி.க்களின் சம்பள உயர்வு குறித்து தீர்மானிக்க 3 பேர் கொண்ட சம்பளக் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது இந்திய எம்.பி.க்களுக்கு மாதச் சம்பளமாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது தவிர நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களின் போது அவர்களது வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் நாளொன்றிற்கு ரூ. 2 ஆயிரம் தரப்படுகிறது.
இவை மட்டுமின்றி தொகுதி நிதியாகவும் மாதம் ரூ. 45 ஆயிரம் தரப்படுகிறது. இதில், ரூ. 15 ஆயிரம் ஸ்டேஷனரி பொருட்கள் வாங்குவதற்கும், மீதமுள்ள ரூ. 30 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் ஆகும்.

இவை தவிர, எம்.பிக்களுக்கு அரசு செலவில் தங்குவதற்கு இடம், விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து செலவுகள், தொலைபேசி வசதிகள் உள்ளிட்டவையும் செய்து கொடுக்கப்படுகின்றது. சொந்தமாக வாகனம் வாங்க ரூ. 4 லட்சம் வரை கடன் வசதியும் செய்து தரப்படுகிறது.
இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் இம்மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அரசு தலைமை கொறடா மாநாடு நடைபெற உள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் நாடாளுமன்ற மற்றும் சட்டசபைகளின் அனைத்துக் கட்சி கொறாடாக்களும் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் எம்.பி.களின் சம்பளம், தினசரி படி, ஓய்வதியம் குறித்து பரீசிலிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே, எம்.பிக்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை இரண்டு மடங்கு அதிகரிக்கவும், எம்.பிக்களுக்கான சம்பள நிர்ணயத்தை குறிப்பிட்ட காலக்கெடுவில் திருத்தியமைக்கவும் நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
இதையடுத்து எம்.பி.க்களின் சம்பள உயர்வு குறித்து தீர்மானிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடைசியாக 2010ம் ஆண்டு எம்.பிக்களின் சம்பளம் திருத்தியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
37 வளரும் நாடுகளின் எம்.பிக்களின் சம்பளத்தை ஆய்வு செய்தால் இஸ்ரேலில்தான் அதிக அளவில் சம்பளம் தருகிறார்கள். அதாவது அங்கு மாதச் சம்பளமாக ரூ. 6.16 லட்சம் பெறுகிறார்கள் எம்.பிக்கள்.
குறைந்த அளவிலான சம்பளத்தைப் பெறுவது துனிஷீயாவைச் சேர்ந்தவர்கள். இவர்களின் மாதச் சம்பளம் ரூ. 7952 மட்டுமே ஆகும்.
துனிஷியா, வெனிசூலா, இலங்கை, நேபாளம், ஹைதி, பனாமா ஆகிய நாட்டு எம்.பிக்கள் இந்திய எம்.பிக்களை விட குறைந்த சம்பளத்தைப் பெறுகிறார்களாம்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications