கேட்பாரற்று கிடக்கும் பி.எப். பணத்தில் முதியவர்களுக்கான புதிய பென்சன் திட்டம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : முதியோருக்கு பென்சன் வழங்க ‘அடல் பென்சன் திட்டம்' உருவாக்கப்படும் என்றும் அதன் மூலம் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பலன் கிடைக்கும் என்றும் பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ளார். இதில், முதியவர்களுக்கான பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்துள்ளார்.

அதன்படி, முதியவர்களுக்கு பென்சன் வழங்க முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் புதிய பென்சன் திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ‘அடல் பென்சன் திட்டம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Govt unveils universal social security and pension schemes

இத்திட்டத்தின் மூலம் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு பலன் கிடைக்கும் என அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இதற்கான பிரீமியத்தில் 50 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும் என்றும், இதற்கான நிதி பி.எப் அக்கவுண்ட்களில் கேட்பாரற்று கிடக்கும் நிதியில் இருந்து பெறப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய தகவலின் படி பிபிஎப் கணக்குகளில் ரூ. 3 ஆயிரம் கோடி ரூபாயும், இபிஎப்பில் ரூ. 6 கோடி ரூபாயும் யாரும் உரிமை கோராத நிலையில் கேட்பாரற்று கிடப்பதாக தெரிய வந்துள்ளது. தற்போது அந்தப் பணத்தில் இருந்து தான் முதியவர்களுக்கான பென்சன் திட்டத்திற்கு நிதி பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+