பண ஒழிப்பு நடவடிக்கையின் பலன் படிப்படியாக கிடைக்கும்.. மத்திய பட்ஜெட்டில் ஜேட்லி
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் படிப்படியாக பலன் கிடைக்கும் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
டெல்லி: 2017-18ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த அருண் ஜேட்லி, பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் படிப்படியாக பலன் கிடைக்கும் என்று கூறினார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இன்று ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் சேர்ந்த ஒருங்கிணைந்த பட்ஜெட் அருண் ஜேட்லியால் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அருண் ஜேட்லி பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் படிப்படியாக பலன் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், அரசின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளதாக அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். கருப்பு பணத்தை ஒழிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்த வழக்கத்தை பாஜக அரசு தற்போது மாற்றியுள்ளது.












Click it and Unblock the Notifications