அடுக்குமாடி குடியிருப்புகள் விலை மேலும் அதிகரிப்பு... ஜிஎஸ்டி கொடுத்த நேரடி விளைவு
ஜிஎஸ்டி அமல்படுத்தியுள்ளதால் கட்டிமுடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: ஜிஎஸ்டி காரணமாக, தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை மேலும் அதிகரிதுள்ளது.
நாடு முழுவதும் ஒற்றை சரக்கு, சேவை வரிவிதிப்பு ஜிஎஸ்டி என்ற பெயரில் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ரியல் எஸ்டேட் துறைக்கு, 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில், புதியதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீட்டு மனைகளின் விலை சற்று குறையும் என்றே கூறப்படுகிறது.

ஆனால், தற்போது கட்டி முடிக்கப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்பட்ட வீட்டு மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் விலை மேலும் உயரவே செய்யும் என்று, ரியல் எஸ்டேட் தொழில்துறையினர் கூறுகின்றனர்.
மேலும், தற்போது கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளின் வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், விலை உயரவே செய்யும் என்றும், இனிமேல் புதியதாக நிலம் வாங்கி, பதிவு செய்து, வீடுகள் கட்டும்போதுதான் அதன் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது.
ஏனெனில் பல்வேறு வரிவிதிப்புகள் மறைந்து, ஜிஎஸ்டி ஒன்று மட்டுமே அமலில் இருக்கும் என்பதே காரணம் எனவும் இத்துறையில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications