ஏடிஎம்மில் காவலாளி அடித்துக் கொலை.. தூங்கியவரைத் தாக்கிய கொடூரர்கள்!
ஜெய்பூர்: ராஜஸ்தானில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க வந்த இரண்டு பேர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த காவலாளியை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜுன்ஜுனு மாவட்டத்தில் இருக்கும் ஏடிஎம் மையம் ஒன்றில் கடந்த 9ம் தேதி திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது. காவலாளி இரவு நேரத்தில் ஏடிஎம் மையத்திற்குள் படுத்து தூங்கியுள்ளார்.
அப்போது அங்கு 2 திருடர்கள் வந்தனர்.
திருடர்கள்
2 திருடர்களும் முகத்தை துணியால் மறைத்து கைகளில் உறை அணிந்திருந்தார்கள். அதில் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த காவலாளியின் தலையில் கட்டையால் திரும்பத் திரும்ப அடித்தார்.
காவலாளி
திருடன் தாக்கியதில் படுகாயம் அடைந்த காவலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். கொள்ளையர்கள் ஏடிஎம் மையத்தில் திருடிக் கொண்டு சென்றுவிட்டனர். காவாளி தூக்கத்தில் இருந்ததால் அவரை தாக்கியபோது அவரால் உதவி கேட்டு குரல் எழுப்பக் கூடிய முடியவில்லை.
வீடியோ
காவலாளி ஈவு, இரக்கமின்றி அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ பார்ப்பவர்களை திடுக்கிட வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிசிடிவி
சிசிடிவி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த மனம் பதை பதைக்க வைக்கும் காட்சி இது தான்.