படேல் சமூகத்தினர் போராட்டம் எதிரொலி..குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் மாற்றம்?
டெல்லி: படேல் சமூகத்தினரினர் நடத்திய போராட்டம் காரணமாக குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக முதல்வர் ஆனந்திபென் பட்டேல் மாற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். அதன் முதல் கட்டமாக, குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேலை மாற்றுவதற்கு பாஜக திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத் மாநிலத்தில் 13 ஆண்டுகளாக தொடர்ந்து முதலமைச்சர் பொறுப்பு வகித்து வந்த நரேந்திர மோடி, 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். இதன் பிறகு புதிய முதல்வராக ஆனந்திபென் படேல் பதவியேற்றார்.
இந்நிலையில், கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி, படேல் சமூகத்தினர் கடந்த ஆண்டு போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்த 23 வயது இளைஞர் ஹார்திக் படேல், தேசவிரோதக் குற்றச்சாட்டின் கீழ் கைதாகி, 200 நாள்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இதனால், முதல்வர் ஆனந்திபென் படேல் மீது படேல் சமூகத்தினர் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், அங்கு பெரும்பான்மையாக வசிக்கும் படேல் சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, குஜராத் மாநிலத்தின் அரசியல் நிலைமை குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரியவரும், பாஜக மூத்த தலைவருமான ஓம் மாத்தூர் அண்மையில் அறிக்கை ஒன்றை பாஜக தலைமையிடம் அளித்தார். அதில், படேல் சமூகத்தினரின் போராட்டத்தை முதல்வர் ஆனந்திபென் படேல் சரியாகக் கையாளத் தவறிவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு மேம்பட வேண்டும் என்றும், அதற்கு ஆட்சியிலும், கட்சியிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆனந்திபென் பட்டேலுக்கு கவனர் பதவி கொடுக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications