”குஜராத்தி குண்டர்கள்”- அவதூறு வழக்கில் தேஜஸ்வி யாதவ்-க்கு குஜராத் கோர்ட் சம்மன்-ராகுல் போல சிக்கல்?
அகமதாபாத்: குஜராத்திகளை குண்டர்கள் என விமர்சித்ததால் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் செப்டம்பர் 22-ந் தேதி நேரில் ஆஜராக குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் நாட்டை விட்டு தப்பி ஓடும் மோடிகள் குறித்து விமர்சித்தார். ஆனால் மோடி என்ற சமூகத்தை இழிவுபடுத்தியதாக ராகுல் காந்தி மீது குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் எம்பி பதவி பறிக்கப்பட்டது. தற்போது உச்சநீதிமன்ற உத்தரவால் 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எம்பி பதவியும் ராகுல் காந்திக்கு திருப்பி தரப்பட்டுள்ளது.

இதே போல ஒரு வழக்கை பீகார் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் எதிர்கொண்டிருக்கிறார். பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மார்ச் 21-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், குஜராத்திகள்தான் குண்டர்கள்- மோசடி செய்பவர்களாக இருக்க முடியும் என விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து தேஜஸ்வி யாதவ் மீது குஜராத் மாநிலம் அகமதாபாத் நீதிமன்றத்தில் தொழிலதிபர் ஹரேஷ் மேத்தா, அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கை மாஜிஸ்திரேட் டி.பார்மர் விசாரித்தார். இதனையடுத்து இவ்வழக்கில் தேஜஸ்வி யாதவ் செப்டம்பர் 22-ந் தேதி அகமதாபாத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications