Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொய் வழக்கு பதிவு.. குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டில் போதை பொருள் வைத்திருந்ததாக வழக்கறிஞர் மீது பொய் வழக்கு பதிவு செய்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டம் பலான்பூர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் சாமர்சிங் ராஜ் புரோகித் என்ற வழக்கறிஞர் தங்கியிருந்தார். ராஜஸ்தானை சேர்ந்த இவர் தங்கியிருந்த அறையில் 1.5 கிலோ அபின் வைத்திருந்ததாக போலீசார் அவரை கைது செய்தனர்.

Gujarat Former IPS officer Sanjiv Bhatt Sent To 20-Year Jail For Planting Drugs To Frame Lawyer

அப்போது, காவல் ஆய்வாளராக இருந்த வியாஸ் என்பவர், வழக்கறிஞர் ராஜ்புரோஹித் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார். ராஜஸ்தானில் இருந்த நிலப்பிரச்சினை தொடர்பாக வழக்கறிஞர் சாமர்சிங் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக, ஐபிஎஸ் அதிகாரியும் சம்பவம் நடந்த போது பலான்பூர் பகுதி எஸ்பியாக இருந்தவருமான சஞ்சீவ் பட் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

பின்னர், அடுத்த சில நாட்களில் கீழமை நீதிமன்றத்தில், அந்த வழக்கறிஞர் அன்று ஹோட்டலில் தங்கவேயில்லை என்று போலீஸ் தரப்பு பதில்மனு தாக்கல் செய்யவே, கோர்ட் அவரை விடுவித்தது. இதையடுத்து, தன்னை கடத்திச் சென்று அடைத்து வைத்ததாக குஜராத் மாநில போலீஸ் அதிகாரி உட்பட 17 பேர் மீது குற்றம்சாட்டி, வழக்கறிஞர் ராஜ்புரோஹித் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் இறுதியில்தான் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய தண்டனை சட்டம் 167, 465, 120பி (கிரிமினல் சதித்திட்டம்) ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, போலீஸ் காவலில் இருந்தவர் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சஞ்சீவ் பட் ஆயுள் தண்டைனையை சிறையில் அனுபவித்து வருகிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு போலீஸ் பணியில் இருந்து நீக்கப்பட்ட சஞ்சீவ் பட், 2018 முதல் சிறையில் இருந்து வருகிறார். ஆயுள் தண்டனை முடிந்த பிறகு தற்போது விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக சஞ்சீவ் பட் வழக்கறிஞர் கூறியுள்ளார். குற்றச்சாட்டுக்களை நீருபிக்க உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+