இளம்பெண் உளவு விவகாரம்: அமித் ஷாவை விசாரிக்க கமிஷன்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உத்தரவுப்படி இளம்பெண்ணை குஜராத் போலீசார் உளவு பார்த்தது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.
குஜராத்தை சேர்ந்த இளம்பெண்ணை போலீசார் உளவு பார்த்ததாக ‘கோப்ரா போஸ்ட்‘ என்ற புலனாய்வு பத்திரிகை தகவல் வெளியிட்டது.

இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக மோடியின் நெருங்கிய நண்பரும், குஜராத் உள்துறை முன்னாள் அமைச்சருமான அமித் ஷா- போலீஸ் அதிகாரி சிங்கால் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் அடங்கிய சி.டியையும் வெளியிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே புதன்கிழமை அளித்த பேட்டியில், இளம்பெண்ணை உளவு பார்த்தது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி, பல தொண்டு அமைப்புகளும், பெண்கள் அமைப்புகளும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனு கொடுத்துள்ளன.
ஜனாதிபதி பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் அதை பரிசீலித்து வருகிறது.
இது எந்த கட்சிக்கும் எதிரான நடவடிக்கை இல்லை. குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தால், இது தொடர்பாக விரைவில் விசாரணைக்கு உத்தரவிடப்படும். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன‘ என்றார்.
இதனிடையே உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கமிஷன் சுதந்திரமாக செயல்பட்டு விசாரணை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சம்மந்தப்பட்ட பெண்ணின் தந்தை, தேசிய மகளிர் ஆணையத்துக்கும், குஜராத் மாநில மகளிர் ஆணையத்துக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், தனது மகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, அவர் எந்த புகாரும் தர விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பாஜக கண்டனம்:
ஒப்புதல் வழங்கப்பட்டவுடன் தனது கடும் கண்டனத்தை பாரதீய ஜனதா கட்சி, தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தங்கள் பிரதமர் வேட்பாளரை எதிரியாகக் கருதி அவரை ஒடுக்கும் நோக்கிலேயே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
குழு அமைக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், இக்குழுவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் பா.ஜ. மூத்த தலைவர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
இது முற்றிலும் மாநில அரசு சம்பந்தப்பட்ட விவகாரம். ஏற்கனவே அம்மாநில அரசு இது குறித்து விசாரிக்க ஒய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை ஆணையம் அமைத்துள்ளபோது, மத்திய அரசு தனியாக ஒரு விசாரணை குழு அமைக்க தேவையில்லை என அவர் மேலும் கூறினார்.
-
தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்!












Click it and Unblock the Notifications