காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு சத்திய சோதனை... பெரு நிறுவனத்துக்கு தாரை வார்க்கிறது குஜராத் அரசு?
Recommended Video
அகமதாபாத்: மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை தனியார் பெருநிறுவனத்துக்கு குஜராத் அரசு தாரை வார்க்கப் போவதாக காந்தியவாதிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மகாத்மா காந்தியின் வாழ்விடமாக திகழ்ந்தது அகமதாபாத் சபர்மதி ஆசிரமம். எத்தனையோ வரலாற்றுச் சம்பவங்களின் சாட்சியமாக திகழ்கிறது சபர்மதி ஆசிரமம்.

காந்தியவாதிகள் போராட்டம்
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை தேசம் கொண்டாடி வரும் நிலையில் சபர்மதி ஆசிரமத்தையே முகவரியாக கொண்ட 2,500 பேர் இப்போது வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். ஆம் தாங்கள் வீதிக்கு வந்துவிடுவோம் என்கிற அச்சத்தால் இந்த போராட்டத்தை அவர்கள் நடத்துகின்றனர்.

சபர்மதி ஆசிரமத்துக்கு நோட்டீஸ்
சபர்மதி ஆசிரமம் உள்ளிட்ட மகாத்மா காந்தி தொடர்புடைய இடங்களை தங்கள் வசமாக்கி அதை சர்வதேச அளவிலான நினைவுச் சின்னமாக மேம்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக சபர்மதி ஆசிரம நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கைவிட கோரிக்கை
அப்படி அரசு சபர்மதி ஆசிரமத்தை கையகப்படுத்தினால் மகாத்மா காந்தி காலத்தில் குடியேறி அங்கேயே தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தாங்களும் வெளியேற்றப்படுவோம் என அஞ்சுகின்றனர் காந்தியவாதிகள். ஆகையால் இந்த நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என போராட்டங்களை சபர்மதி ஆசிரமவாசிகள் நடத்தி உள்ளனர்.

தனியார் ஆதாயத்துக்காக தாரை வார்ப்பு?
இன்னொருபக்கம், தனியார் கார்ப்பரேட் ஒன்றுக்காக குஜராத் அரசு சபர்மதி ஆசிரமம் அருகே பெருமளவு நிலம் ஒதுக்கீடு செய்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் ஆதாயத்துக்காகவே சபர்மதி ஆசிரமத்தையும் கபளீகரம் செய்யப் பார்க்கிறது குஜராத் அரசு என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
சத்திய சோதனை!












Click it and Unblock the Notifications