பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளில் இருந்து வந்த 90 இந்துக்களுக்கு குஜராத்தில் இந்திய குடியுரிமை!
பாகிஸ்தானில் இருந்து வந்த 90 இந்துக்களுக்கு குஜராத்தில் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
காந்திநகர்: பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளில் இருந்து வந்த 90 இந்துக்களுக்கு குஜராத்தில் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏராளமான இந்துக்கள் வசித்து வருகின்றனர்.
அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

இந்திய குடியுரிமை
இந்நிலையில் 90 இந்துக்கள் இந்தியாவில் குடியேறி நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். அவர்கள் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பித்தனர்.

அரசிதழில் குறிப்பாணை
கடந்த, 2016ஆம் ஆண்டு இவர்களுக்கு குடியுரிமை வழங்கும் நடைமுறையில் மத்திய அரசு மாற்றம் செய்தது. இதையடுத்து, அரசிதழில் குறிப்பாணை வெளியிடப்பட்டது.

குடியுரிமை சான்றிதழ்
இதைத்தொடர்ந்து குஜராத்தின் ஆகமதாபாத், காந்தி நகர் மற்றும் கட்ச் மாவட்ட ஆட்சியர்களுக்கு, அந்தந்த மாவட்டங்களில் வசிக்கும், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.

இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை
இதையடுத்து ஆகமதாபாதில் நேற்று நடைபெற்ற விழாவில் 90 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்திய குடியுரிமை பெற்றவர்கள், ஆதார், பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications