குஜராத் மாநகராட்சி தேர்தல் வாக்குப் பதிவு.. வாக்களித்தார் அமித்ஷா-பாஜக, காங்., ஆம் ஆத்மி பலப்பரீட்சை
அகமதாபாத்: குஜராத் மாநகராட்சிகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
குஜராத் மாநிலத்தின் 6 மாநகராட்சிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றன. இந்த தேர்தலில் மொத்தம் 1.14 கோடி பேர் வாக்களிக்கின்றனர். இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

குஜராத்தில் பாஜக, காங்கிரஸ் இடையேதான் இதுவரை போட்டி இருந்து வந்தது. இந்த முறை ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் களத்தில் குதித்திருக்கிறது. மொத்தம் 575 இடங்களுக்கான தேர்தலில் 2,276 பேர் போட்டியிடுகின்றனர்.
பாஜக சார்பில் அதிகபட்சமாக 577 பேரும் காங்கிரஸ் 566 பேரையும் ஆம் ஆத்மி கட்சி 470 பேரையும் வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது. வதோதரா மாநகராட்சியில் குஜராத் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி இன்று வாக்களித்தார்.

அகமதாபாத்தின் நாரன்புராவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலையில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (பிப்.23) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அண்மையில் பஞ்சாப் மாநில உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. டெல்லியில் விவசாயிகள் மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதில் பஞ்சாப் விவசாயிகள் பெருமளவு பங்கேற்றுள்ளனர். இதனால் பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications