மறக்க முடியாத வதைக்களம்.. ஆறாத ரணம்.. குல்பர்க் கொடூரம்
டெல்லி: குல்பர்க் சொசைட்டி முஸ்லீ்ம்கள் குடியிருப்பில் இந்து மத வெறியர்கள் நடத்திய கொடூர மத வெறியாட்டம் காவு கொண்ட உயிர்கள் எண்ணிக்கை 69.. ஆனால் பல லட்சம் மக்களின் மனதில் ஆறாத வடுவாக அமைந்து போய் விட்டது இந்த கொடூரச் சம்பவம்.
இந்த சம்பவம் முதல்வர் மோடியின் தூண்டுதலின் பேரில் நடக்கவில்லை என்று கோர்ட் கூறி விட்டது.
ஆனால் கலவரத்தில் சிக்கி தங்களது குடும்பத்தினரை, உறவுகளை வெறியர்களிடம் பறி கொடுத்து விட்டு இன்னும் கூட தங்களது வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் மறக்க முடியாத துயரத்தில் மூழ்கியுள்ளனர்.

முஸ்லீம் குடியிருப்பு
குல்பர்க் சொசைட்டி என்பது அகமதாபாத், சமன்புரா பகுதியில் உள்ள ஒரு முஸ்லீம் குடியிருப்பாகும்.

நடுத்தர முஸ்லீம்கள்
இங்கு உயர் நடுத்தர முஸ்லீம்கள், வர்த்தகத்தில் ஈடுபட்ட முஸ்லீம்கள் வசித்து வந்தனர். 29 பங்களாக்கள், 10 அடுக்குமாடிக் குடியிருப்புகள் இங்கு உள்ளன.

2002, பிப்ரவரி 28ல்
2002ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி இங்கு பெரும் கலவரம் வெடித்தது. வீடுகள் எரிக்கப்பட்டன. ஒட்டுமொத்த வீடுகளையும் மத வெறியர்கள் தீவைத்து எரித்தனர்.

மொத்தமாக எரிந்து போன 69 பேர்
கலவரத்தின்போது முன்னாள் காங்கிரஸ் எம்பி ஈசான் ஜாப்ரியின் வீட்டுக்குள் முஸ்லீம்கள் தஞ்சமடைந்தனர். ஆனால்கலவரக்காரர்கள் அத்தனை பேரையும் மொத்தமாக வீட்டோடு வைத்து எரித்து விட்டனர். இதில் ஜாப்ரி உள்பட 69 பேர் பரிதாபமாக மடிந்து போனார்கள்.

6 மணி நேர வெறியாட்டம்
கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கு இந்த வெறியாட்டம் நீடித்து ஓய்ந்தது...












Click it and Unblock the Notifications