செம்மரம் வெட்டியோர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு.. 30 பேருக்கு வலை வீச்சு.. கடப்பாவில் பரபரப்பு
ஆந்திர மாநில வனப்பகுதியில் செம்மரம் வெட்டியோர் மீது ஆந்திர போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. தப்பியோடிய 30 பேரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
கடப்பா: ஆந்திர மாநில வனப்பகுதியில் செம்மரம் வெட்டியோர் மீது 5 ரவுண்டு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் போலீசார். தப்பியோடிய 30 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் கடப்பாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ளது லங்கமா வனப்பகுதி. இங்கு 30 பேர் கொண்ட கும்பல் செம்மரம் வெட்டுவதாக ஆந்திர போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதைப் பார்த்த செம்மரம் வெட்டுவோர் தங்களை தற்காத்துக் கொள்ள போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

5 ரவுண்டு துப்பாக்கிச் சூடு
இதனையடுத்து, வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 5 ரவுண்ட் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

தப்பியோட்டம்
துப்பாக்கியால் போலீசார் சுடத் தொடங்கிய உடன் அச்சமுற்ற 30 பேரும் உயிருக்கு பயந்து தப்பியோடிவிட்டனர். அவர்கள் வனப்பகுதியில் மறைந்துள்ளனரா அல்லது நகரப் பகுதிக்கு தப்பியோடிவிட்டனரா என்பது தெரியாமல் போலீசார் விழித்து வருகின்றனர்.

தனிப்படை
இந்நிலையில், தப்பியோடிய 30 பேரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். 5 தனிப்படைகள் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் போலீசார்.

அடிக்கடி துப்பாக்கிச் சூடு
செம்மரம் வெட்டுவதாகக் கூறி தமிழர்கள் மீது கடுமையான தாக்குதல்களை ஆந்திரா போலீசார் நிகழ்த்தி வருகின்றனர். 20 தமிழர்கள் ஆந்திர வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications