பஞ்சாபில் துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டு காலையில் திடுக்கிட்டு கண்விழித்த தினாநகர் வாசிகள்
குர்தாஸ்பூர்: பஞ்சாபில் தினாநகர் பகுதி மக்கள் தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டுத் தான் இன்று காலை எழுந்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தினாநகருக்குள் இன்று அதிகாலை புகுந்த தீவிரவாதிகள் பேருந்து மற்றும் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டு தான் தினாநகர் பகுதி மக்கள் காலையில் கண் விழித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டு எழுந்த தினாநகர் மக்கள் பயந்து போய் வீடுகளுக்குள் முடங்கினர். டிவியை ஆன் செய்து என்ன நடக்கிறது என்ற விவரத்தை தெரிந்து கொண்டனர்.

கமல்ஜீத் சிங் மதாரு கூறுகையில்,
தீவிரவாதிகள் என்னை துப்பாக்கியால் சுட்டுவிட்டு என் மாருதி 800 காரை திருடிச் சென்றனர். அவர்கள் ராணுவ சீருடை அணிந்திருந்தனர் என்றார்.
கமல்ஜீத் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தீவிரவாத தாக்குதல் பற்றி அறிந்து நாங்கள் பயந்துவிட்டோம். தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது என்று தினாநகர் காவல் நிலையம் அருகே வசிக்கும் குமார் தெரிவித்துள்ளார்.

போலீசார் கூறுகையில்,
தீவிரவாதிகள் மாருதி காரை பறித்துக் கொண்டு சாலையோர உணவகம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் வியாபாரி ஒருவர் பலியானார். அதன் பிறகு அவர்கள் பேருந்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 4 பயணிகள் காயம் அடைந்தனர். பின்னர் சுகாதார நிலையம் மற்றும் போலீசாரின் குடும்பத்தார் வசிக்கும் கட்டிடம் நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர் என்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications