குட்கா விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது திமுக
குட்கா விவகாரத்தில் திமுக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: குட்கா விவகாரத்தில் திமுக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது.
கடைகளில் குட்கா, பான்மசாலா விற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி கடைகளில் குட்கா, பான்மசாலா விற்பனை செய்யப்படுகிறது.
குட்கா விற்க அமைச்சர் சி.விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் குட்கா மொத்த வியாபாரியிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதித்ததாக திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குட்கா ஊழலை சிபிஐ விசாரிக்க அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் திமுக தரப்பை விசாரிக்க வேண்டும் என அக்கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குட்கா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யார் மனு தாக்கல் செய்தாலும் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்துள்ள கேவியட் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.