ஜே.என்.யூ. விவகாரத்தில் இந்தியர்களை மோடி அரசு முட்டாளாக்குகிறது- லஷ்கர் தலைவர் சயீத்
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் தன்னை சம்பந்தப்படுத்தி இந்திய அரசு அதன் மக்களை முட்டாள் ஆக்குகிறது என்று லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் புகழ்பாடும் நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது அப்சல் குருவை பாராட்டியும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷமிட்ட மாணவர்கள் சங்க தலைவர் கன்ஹையா குமார் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் ஆதரவளித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து சயீத் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
இந்திய அரசு
ஜேஎன்யூ போராட்டம் குறித்து என் பெயரில் ட்விட்டரில் உள்ள போலி கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதை வைத்து என் மீது குற்றம்சாட்டுவது இந்திய அரசு அதன் மக்களை முட்டாள் ஆக்குவதற்கு சிறந்த உதாரணம்.
|
குற்றச்சாட்டு
பாகிஸ்தான் மீது உள்ள வெறுப்பு மற்றும் பகையால் தான் இந்தியா இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறது.
|
மோடி அரசு
26/11 உள்பட அனைத்து விஷயங்களிலும் இந்தியாவின் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை இந்த போலி ட்விட்டர் கணக்கு மூலம் தெரிய வந்துள்ளது. இந்திய அரசு இவ்வளவு தரம் தாழ்ந்து நடந்துள்ளது.

அப்சல் குரு
கடந்த 9ம் தேதி இரவு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தீவிரவாதி அப்சல் குருவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை சில மாணவர்கள் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications