ஹர்திக் படேல் மீதான தேசதுரோக வழக்கில் சில பிரிவுகளை ரத்து செய்தது குஜராத் ஹைகோர்ட்!
அகமதாபாத்: இடஒதுக்கீடு கோரி போராடிய குஜராத் படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேலின் நடவடிக்கைகளை அரசுக்கு எதிரான போராக கருதக் கூடாது என்று அம்மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இடஒதுக்கீடு கொடு அல்லது இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டு என்ற முழக்கத்துடன் போராட்டம் நடத்தி வருபவர் ஹர்திக் படேல். அவர் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் தேசதுரோக வழக்கை போட்டுள்ளது குஜராத் அரசு.

இதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஹர்திக் படேலும் அவரது ஆதரவாளர்களும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்திவாலா, ஹர்திக் படேலின் நடவடிக்கைகளை அரசுக்கு எதிரான போராக கருத வேண்டியதில்லை எனக் கூறினார்.
மேலும் ஹர்திக் உள்ளிட்டோர் மீது இதற்காக போடப்பட்ட ஐ.பி.சி. 121 மற்றும் இருபிரிவினரிடையே மோதலைத் தூண்டியதாக போடப்பட்ட 153-A, தேச ஒருமைப்பாட்டுக்கு எதிரான செயலுக்கான 153B ஆகிய பிரிவுகளையும் அவர் ரத்து செய்தார்.
இருப்பினும் ஹர்திக் மீது போடப்பட்ட தேசதுரோகம் தொடர்பான பிரிவான 124, அரசுக்கு எதிரான போருக்கான சதியில் ஈடுபட்டதற்கான 121-A ஆகிய பிரிவுகளை ரத்து செய்யவும் நீதிபதி மறுத்துவிட்டார். இந்த பிரிவுகளின் கீழான வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.
அத்துடன் வேறு வழக்குகளில் ஹர்திக் படேலை கைது செய்ய 15 நாட்களுக்கு இடைக்கால தடையையும் விதித்துள்ளது குஜராத் உயர்நீதிமன்றம்,
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications