கணவனை தாக்கிய 5 பேர்.. பொறுக்காமல் எல்லோரையும் புரட்டி எடுத்த மனைவி.. ஹரியானாவில் சுவாரசியம்
ஹரியானாவில் தன் கணவனை தாக்கிய நபர்களை பெண் ஒருவர் திருப்பி தாக்கி இருக்கிறார்.
Recommended Video
சண்டிகர்: ஹரியானாவில் தன் கணவனை தாக்கிய நபர்களை பெண் ஒருவர் திருப்பி தாக்கி இருக்கிறார். 5 பேரை தனி ஆளாக அந்த பெண் தாக்கி உள்ளார்.
இது வீடியோவாக வெளியாகி இருக்கிறது. நேற்று இணையம் முழுக்க பல்வேறு நபர்களால் இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டு மிகவும் வைரல் ஆகி இருக்கிறது.
இந்த பெண் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. ஆனால் அந்த 5 பேருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.
என்ன வீடியோ
அந்த வீடியோவில் 5 பேரும் சேர்ந்து கீழே கிடக்கும் அந்த பெண்ணின் கணவனை அடிக்கிறார்கள். அவர்கள் பெரிய மரக்கட்டை வைத்து அந்த நபரை தாக்கி இருக்கிறார்கள். இதை அங்கு இருந்த வயதான நபரும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
பதில் தாக்குதல்
அந்த இடத்திற்கு வந்த அந்த ஆணின் மனைவி உடனடியாக அனைவரையும் தாக்க தொடங்கினார். அவரிடம் வெறும் கம்பு மட்டுமே இருந்துள்ளது. அவர்கள் திருப்பி தாக்கும் போது கூட கவலை படமால் தாக்கி இருக்கிறார். பின் அவர்கள் எல்லோரும் அங்கிருந்து செல்லும் அவரை காத்திருந்துள்ளார்.
எந்த பெண்
அவர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. ஆனால் அவர்களை விரட்டிவிட்டுவிட்டு அந்த பெண் பஞ்சாபியில் பேசி இருக்கிறார். இது நிலப்பிரச்சனை காரணமாக நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சூப்பர்
பலரும் இந்த பெண்ணை பாராட்டி வருகிறார்கள். இவர் ''வாவ், தைரியமான பெண். அந்த கிரிமினல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றுள்ளார்.