ஹரியானாவில் தலித் குடும்பத்திற்கு தீ வைத்ததில் 2 குழந்தைகள் உடல் கருகி பலி

Subscribe to Oneindia Tamil

சன்டிகர்: ஹரியானா மாநிலத்தில் தலித் குடும்பம் வசித்த வீட்டிற்கு உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் தீ வைத்ததில் 2 குழந்தைகள் உடல் கருகி பலியாகினர்.

ஹரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டம் சன்பெத் கிராமத்தில் வசித்து வரும் தலித் குடும்பத்தின் வீட்டின் மீது உயர் சாதியான ராஜ்புட் சாதியைச் சேர்ந்தவர்கள் திங்கட்கிழமை இரவு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் அந்த தலித் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் படுகாயம் அடைந்தனர்.

Haryana: 2 kids child burnt alive in attack on Dalit family

அவர்களின் இரண்டரை வயது மகள் மற்றும் ஒன்பது மாத ஆண் குழந்தை உடல் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் கடந்த மாதம் நடந்த கொலையில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது தீ வைத்து எரிக்கப்பட்ட வீட்டினரின் பெயர் அந்த கொலை வழக்கில் பதிவு செய்யப்பட்டது. தீ வைத்தவர்கள் கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் ஆக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

அதனால் இந்த சம்பவம் பழிக்குப்பழியாக நடந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+