ஹரியானா தேர்தல்- பாஜகவில் உட்கட்சி மோதல்! வேட்பாளர் தேர்வு குறித்து சிபிஐ விசாரிக்க கோரிக்கை!!
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் வெல்லும் வாய்ப்புள்ள பாரதிய ஜனதாவில் உட்கட்சி மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாஜகவினரே போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 15-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 10 ஆண்டுகாலமாக ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

பாஜகவுக்கு சாதகம்
அத்துடன் முதல்வர் ஹூடாவுக்கு எதிராக பல காங்கிரஸ் தலைவர்கள் கட்சியைவிட்டே வெளியேறி பாரதிய ஜனதாவில் இணைந்துவிட்டனர். இம்மாநிலத்தில் பாரதிய ஜனதாவில் குறிப்பிடும்படியான தலைவர் எவரும் இல்லை. ஆனால் ஆளும் காங்கிரஸ் மீதான அதிருப்தி, ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் ஒதுங்கிக் கொண்டது போன்ற காரணங்களால் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உட்கட்சி மோதல்
இந்த நிலையில் பாஜகவுக்குள் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத மூத்த தலைவர்கள், பிரதமர் மோடி இந்த பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிபிஐ விசாரணை
அத்துடன் பாரதிய ஜனதாவின் வேட்பாளர் தேர்வு குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும் பிரதமர் உத்தரவிட அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பொதுச்செயலர் ராஜினாமா
இதன் உச்சமாக பாஜகவின் மாநில பொதுச்செயலர் ஜஸ்பிர் மல்லாவுர் நேற்று தமது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். அவர் அம்பாலா நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதேபோல் பாஜகவின் மற்றொரு மூத்த தலைவராக கோதராவும் கோதாவில் குதித்துள்ளார்.

90 பேரைத்தானே தேர்வு செய்யனும்..
ஆனால் பாஜகவின் ஹரியானா மாநில மேலிடப் பொறுப்பாளர் கைலாஷ் விஜயவர்கியாவோ, வேட்பாளர்கள் தேர்வு என்பது பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில்தான் நடைபெற்றது. மொத்தம் 3 ஆயிரம் பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். ஆனால் இருப்பது 90 தொகுதிகள்தானே.. 90 பேரைத்தானே தேர்வு செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலிடம் அதிர்ச்சி
இந்த கலகக் குரல்களால் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று அக்கட்சியின் மேலிடத் தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் சமரச முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications