வதேராவின் "நிலக் கொள்ளை": நீதிபதி திங்ரா தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்தது ஹரியானா!
சண்டிகர்: சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிலக் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.என். திங்ரா தலைமையில் கமிஷனை அமைத்து ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் ஏராளமான அரசு மற்றும் விவசாய நிலங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கினார். இந்த மாநிலங்களில் நடந்த காங்கிரஸ் ஆட்சியின் துணை கொண்டு அவரால் பல நூறு ஏக்கர் நிலங்களை வளைக்க முடிந்தது.

ராபர்ட் வதேரா தாம் வாங்கிய நிலங்களை டி.எல்.எப். உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் விலைக்கு விற்றுள்ளார். இந்த நில பேரங்களில் பெரிய அளவில் ஊழல்கள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலக் கொள்ளையை முதன் முதலில் அம்பலப்படுத்தியவர் அசோக் கெம்கா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிதான்.
இது அரசியலில் பெரும் புயலை வீசிக் கொண்டிருந்தது. ஹரியானா சட்டசபை தேர்தலில் இந்த விவகாரத்தை பாரதிய ஜனதா கையில் எடுத்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வதேராவின் நிலக் கொள்ளை குறித்து விசாரணை நடத்துவோம் என்றும் பாரதிய ஜனதா கட்சி அறிவித்தது.
ஹரியானா தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றிய நாள்முதலே வதேராவின் நிலக்கொள்ளை குறித்து விசாரணை நடத்துவோம் என்றும் அக்கட்சி கூறி வந்தது. இந்நிலையில் வதேராவின் நிலக் கொள்ளை குறித்து விசாரணை நடத்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி திங்ரா தலைமையில் கமிஷனை அமைத்து ஹரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ராபர்ட் வதேரா எங்கெங்கு நிலம் வாங்கி மோசடி செய்தார் என்பதை இந்த விசாரணைக் கமிஷன் முழுமையாக விசாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications