தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க 3 பொண்டாட்டி கட்டிக்கொள்ளுங்கள்: மாஜிஸ்திரேட்
போபால்: தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க ஆண்கள் ஆளுக்கு 3 மனைவிகள் வைத்துக் கொள்ளுமாறு மத்திய பிரதேச மாநில சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் பண்டல்கன்ட் பகுதியில் இருக்கும் திகம்கார் மாவட்டத்தில் உள்ள லிதோரா கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ஜதாரா சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் பி.கே. பாண்டே கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

மனைவிகள்
மத்திய பிரதேசத்தில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. அதை சமாளிக்க ஆண்கள் 3 மனைவிகளை வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மனைவி குழந்தைகளை பெறவும், மற்ற இருவர் தண்ணீர் எடுக்கவும் செய்யலாம்.

தண்ணீர்
கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் ஜதாரா பிளாக்கில் உள்ள பைர்வார் கிராமம் வழியாக சென்றேன். அப்போது இரவு 2 மணிக்கு கூட பெண்கள் தண்ணீர் எடுத்துச் செல்வதை காண முடிந்தது.

சமாளிக்க
தண்ணீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. தண்ணீர் குடிக்க வேண்டும் எனில் பணம் உள்ளவர்கள் 3 மனைவிகளை வைத்துக் கொள்ளலாம். பணம் இல்லாதவர்களால் 3 மனைவிகளை சமாளிக்க முடியாது.

பெண்கள்
பண்டல்கன்ட் பகுதியில் பெண்களின் எண்ணிகை மிகவும் குறைவு. அது எனக்கும் தெரியும். நம் அண்டை மாவட்டமான உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியால் தான் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட குறைவாக உள்ளது என்றார் பாண்டே.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications