திருப்பதியில் புதையலை எடுக்கவே பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு- தலைமை அர்ச்சகர் பரபர புகார்
திருப்பதியில் புதையலை எடுக்கவே பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தலைமை அர்ச்சகர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
Recommended Video

திருப்பதி: திருப்பதியில் புதையலை எடுப்பதற்காகவே பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தலைமை அர்ச்சகர் பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.
திருப்பதி கோயிலில் அதிகாரிகள் சில அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொண்டு அங்குள்ள புதையலை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளதாக தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு புகார் தெரிவித்தார்.
இதனிடையே திருப்பதில் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுவதால் பக்தர்களுக்கு வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 17-ஆம் தேதி காலை 6 மணி வரை ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பக்தர்கள் அனுமதி
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு கூறுகையில் திருப்பதி கோயில் உள்ளே பக்தர்கள் அனுமதிக்க மறுப்பது வேதனை அளிக்கிறது. மஹா சம்ப்ரோக்ஷணம் நடக்கும் போது இதற்கு முன்பும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

நகைகள் மாயம்
திருப்பதி மலையேற விடாமல் தடுப்பது, கேமராவை மூடுவது விபரீதத்தை ஏற்படுத்தும். திருப்பதி கோயில் மடப்பள்ளியில் சில விஷயங்கள் நடந்தன. திருப்பதி கோயிலில் உள்ள விலை உயர்ந்த நகைகள் காணாமல் போய் உள்ளன.

சிபிஐ விசாரணை
உச்சநீதிமன்றத்தில் 19-ஆம் தேதி வழக்கு வரும்போது சிபிஐ விசாரிக்க கோருவோம். திருப்பதியில் புதையலை எடுக்கவே பக்தர்களை தடுக்கின்றனர்.
ரிமோட் சென்சிஸிங் மூலம் கோயிலில் உள்ள புதையல் குறித்து தெரியவந்துள்ளது.

அர்ச்சகர் அழைப்பு
19-ஆம் தேதி பக்தர்கள் அனைவரும் திருப்பதி வர வேண்டும். பக்தர்களை கோயிலுக்கு வராமல் தடுப்பது இந்துக்களுக்கு எதிரானது. இந்து சம்பிரதாயம் தெரிந்தவர்களுக்கு மட்டும் திருப்பதி தேவஸ்தானத்தில் இடம் தர வேண்டும். திருப்பதியில் ஜிபிஆர் முறையில் புதையல் குறித்து சென்னை ஐஐடி ஆராய்ந்துள்ளது என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications