திருப்பதியில் புதையலை எடுக்கவே பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு- தலைமை அர்ச்சகர் பரபர புகார்
திருப்பதியில் புதையலை எடுக்கவே பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தலைமை அர்ச்சகர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
Recommended Video

திருப்பதி: திருப்பதியில் புதையலை எடுப்பதற்காகவே பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தலைமை அர்ச்சகர் பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.
திருப்பதி கோயிலில் அதிகாரிகள் சில அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொண்டு அங்குள்ள புதையலை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளதாக தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு புகார் தெரிவித்தார்.
இதனிடையே திருப்பதில் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுவதால் பக்தர்களுக்கு வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 17-ஆம் தேதி காலை 6 மணி வரை ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பக்தர்கள் அனுமதி
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு கூறுகையில் திருப்பதி கோயில் உள்ளே பக்தர்கள் அனுமதிக்க மறுப்பது வேதனை அளிக்கிறது. மஹா சம்ப்ரோக்ஷணம் நடக்கும் போது இதற்கு முன்பும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

நகைகள் மாயம்
திருப்பதி மலையேற விடாமல் தடுப்பது, கேமராவை மூடுவது விபரீதத்தை ஏற்படுத்தும். திருப்பதி கோயில் மடப்பள்ளியில் சில விஷயங்கள் நடந்தன. திருப்பதி கோயிலில் உள்ள விலை உயர்ந்த நகைகள் காணாமல் போய் உள்ளன.

சிபிஐ விசாரணை
உச்சநீதிமன்றத்தில் 19-ஆம் தேதி வழக்கு வரும்போது சிபிஐ விசாரிக்க கோருவோம். திருப்பதியில் புதையலை எடுக்கவே பக்தர்களை தடுக்கின்றனர்.
ரிமோட் சென்சிஸிங் மூலம் கோயிலில் உள்ள புதையல் குறித்து தெரியவந்துள்ளது.

அர்ச்சகர் அழைப்பு
19-ஆம் தேதி பக்தர்கள் அனைவரும் திருப்பதி வர வேண்டும். பக்தர்களை கோயிலுக்கு வராமல் தடுப்பது இந்துக்களுக்கு எதிரானது. இந்து சம்பிரதாயம் தெரிந்தவர்களுக்கு மட்டும் திருப்பதி தேவஸ்தானத்தில் இடம் தர வேண்டும். திருப்பதியில் ஜிபிஆர் முறையில் புதையல் குறித்து சென்னை ஐஐடி ஆராய்ந்துள்ளது என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications