பெங்களூரில் விளாசிய மாலை மழை.. டிராபிக் நெரிசலால் மக்கள் அவதி
பெங்களூர்: சமீபத்தில்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த கர்நாடக தலைநகர் பெங்களூரில் இன்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் டிராபிக் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.
பெங்களூரில் கடந்த மாத இறுதியில் பெய்த கன மழையால் ஏரிகள் உடைந்து தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலையில் மக்கள் மீன் பிடித்த காட்சிகள் அரங்கேறின. படகில் உணவு பொட்டலங்கள் வினியோகம் செய்யப்ப்டடன.
இந்நிலையில், சற்று ஓய்ந்திருந்த மழை கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் திடீரென கொட்டி தீர்த்தது. பிறகு சற்று ஓய்வெடுத்த வருண பகவான் இன்று மாலை மழையை பொழிய தொடங்கினார்.
மாலை சுமார் 5 மணிக்கு ஆரம்பித்த மழை காற்றுடன் பெரும் மழையாக கொட்டத்தொடங்கியது. இதனால் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் டிராபிக் நெரிசலில் சிக்கி மழையில் நனைத்து கஷ்டப்பட்டனர்.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.