தமிழகத்தை தொடர்ந்து பெங்களூரிலும் மழை.. மக்கள் மகிழ்ச்சி
பெங்களூரில் பல இடங்களில் அதிகாலையிலிருந்து மழை பெய்து வருகிறது.
பெங்களூர்: தமிழகத்தை தொடர்ந்து தற்போது பெங்களூரில் பல இடங்களில் அதிகாலையிலிருந்து மழை பெய்து வருகிறது.
தென்னிந்தியாவில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. முக்கியமாக தமிழகம் மற்றும் கேரளாவில் அதிக மழை பெய்து வருகிறது.

முக்கியமாக கேரளாவிற்கு மீண்டும் சில பகுதிகளில் ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் காலையில் இருந்து சென்னை உட்பட10க்கு மேற்பட்ட மாவட்டங்களில் மிக மோசமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தை தொடர்ந்து தற்போது பெங்களூரில் பல இடங்களில் அதிகாலையிலிருந்து மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே பெங்களூரில் மிதமான மழை பெய்து வந்தது. தற்போது மீண்டும் மழை தொடங்கி இருக்கிறது.
பெங்களூர் மட்டுமில்லாமல் கர்நாடகாவின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. பெங்களூரில் சாந்தி நகர், ஜெயநகர், சில்க்போர்ட், கோரமங்களா, பிடிஎம், பன்சங்கரி, இந்திராநகர் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த சில மணி நேரமாக மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications