சபரிமலையில் கனமழை: பம்பை ஆற்றில் குளிக்க, மலையேற பக்தர்களுக்கு தடை
திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று இரவு பெய்த கன மழையால் பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கவும், மலையேறவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. முதல் நாளில் இருந்தே சபரிமலையில் கன மழை பெய்து வருகிறது. கடும் மழையையும் பொருட்படுத்தாமல் ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
நேற்று மாலை முதல் சபரிமலையில் விடாமல் மழை பெய்து வருகிறது. மாலை 3 மணி அளவில் மழை தீவிரம் அடைந்ததால் பம்பையில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டது. இதே போல் சன்னிதானத்தில் இருந்து பக்தர்கள் கீழே வரவும் அனுமதிக்கப்படவில்லை.

பம்பையில் வெள்ளம்
தொடர் மழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பம்பை மணல் புரத்தில் பம்பை ஆற்று நீர் கரையை தாண்டி பாய்ந்ததால் அங்குள்ள பக்தர்கள் தங்கும் மண்டபமான ராமமூர்த்தி மண்டத்திற்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். ஆற்றில் புனித நீராட பக்தர்களை போலீசார் அனுமதிக்கவில்லை

பக்தர்கள் தவிப்பு
சபரிமலையில் உள்ள கக்கியாற்றிலும் அதிக அளவில் வெள்ளம் ஓடுகிறது. சபரிமலை சன்னிதானத்திலும் மழை நீர் தேங்கி உள்ளது. கூனார் மலைபகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள போலீசாருக்கு உணவு கொண்டுச் சென்ற ஒருவரை மழை வெள்ளம் இழுத்துச் சென்றது. இதைத் தொடர்ந்து அவரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

ஐயப்ப பக்தர்கள் சிரமம்
பம்பை அருகே திரிவேணி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கின. போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லாமல் இருக்க வடங்களை கட்டினர். வெள்ளப்பெருக்கை அடுத்து சன்னிதானத்தில் இருந்து தீயணைப்பு படையினர் மற்றும் அதிவேக அதிரடி படையினர் பம்பைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஐயப்ப பக்தர்கள் கடும் சிரமம் அடைந்து உள்ளனர்.

திருவனந்தபுரத்தில் விடுமுறை
கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் ஓடுகிறது. இதனால் திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications