கேதார்நாத்தில் கடும் வெள்ளப்பெருக்கு.. புனித யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் தவிப்பு..
Subscribe to Oneindia Tamil
கேதார்நாத் : உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.
இதனால் கேதார்நாத், பத்ரிநாத்துக்கு புனித யாத்திரை சென்ற பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

கேதர்நாத்தில் உள்ள மந்தாகினி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலை கடும் சேதமடைந்துள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
கடும்கன மழையால் கேதார்நாத், பத்ரிநாத்துக்கு புனித யாத்திரைக்கு சென்ற பயணிகள் ஆங்காங்கே தங்க வைக்கபட்டுள்ளனர்.
இதையடுத்து, உத்தரகண்ட் மாநிலத்திற்கும், இதே போன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்திற்கும் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications