பெங்களூருவில் தொடரும் கனமழை.. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

பெங்களூருவில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் தெருக்களில் ஆறுபோல் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இடியும் மின்னலுமாய் பெய்த கனமழையால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பெங்களூருவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

Heavy rains lash Bengaluru

நேற்று இரவு பெய்த மழையால் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. வானிலை மையத்தின் கணிப்பு பொய்யாகவில்லை. வியாழக்கிழமை இரவும் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்த வறட்சியை சமாளிக்க செயற்கை மழை பெய்விக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் கர்நாடக அரசு அறிவித்தது. அதன்படி, செயற்கை மழை பெய்விக்கும் பணிகள் கர்நாடகத்தில் மும்முரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், செயற்கை மழை பெய்விக்கும் பணிகளை நேற்று பெங்களூரு ஜக்கூர் விமான நிலையத்தில் அமைச்சர் எச்.கே.பட்டீல் துவக்கி வைத்தார்.

இதனையடுத்து, அமெரிக்காவில் இருந்து அதிநவீன வசதிகள் கொண்ட அந்த விமானம் பெங்களூரு புறநகர் பகுதியான ஆனேக்கல், ராமநகர் மாவட்டங்களில் வானில் பறந்தபடி செயற்கை மழை பெய்வதற்காக ரசாயன பொடிகளை தூவியதை அடுத்து கருமேகங்கள் திரண்டு மழை பெய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+