சிட்னி ஹோட்டல் முற்றுகை – இந்தியாவின் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு தீவிரம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சிட்னி மற்றும் பெல்ஜியம் நகர்களில் நடைபெற்ற அதிரடித் தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியாவில் முக்கிய இடங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நேற்று ஒரு ஹோட்டலில் புகுந்து பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்த தீவிரவாதி மீது ஆஸ்திரேலிய போலீசார் அதிரடி தாக்குதல் நடத்தி பலரை மீட்டனர்.

இதேபோல் பெல்ஜியம் நாட்டின் கென்ட் நகரில் தீவிரவாதிகள் பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்துக்கொண்ட சம்பவமும் நேற்று நடந்துள்ளது.
இந்த நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்தியா மீதான தாக்குதல் மிரட்டலைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் அதிகபட்ச உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முக்கிய பகுதிகளில் போலீசாரின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications