'சில்லி' விஷயங்களில் கவனம் வைக்காதீர்கள்.. மதுரா கலவரம் தொடர்பாக மீடியாக்களிடம் சீறிய ஹேமமாலினி
மதுரா: நான் மதுரா மக்களுக்கு என்ன பணி செய்துள்ளேன் என்பது தொகுதி மக்களுக்கு தெரியும், மீடியாக்காரர்களுக்கு சொல்ல வேண்டிய தேவையில்லை என்று நடிகையும், அத்தொகுதி எம்.பியுமான ஹேமமாலினி சீற்றமாக தெரிவித்தார்.
மதுராவில் ஆக்கிரமிப்பாளர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் நடுவே நடைபெற்ற மோதலில், ஒரு எஸ்.பி உட்பட 24 பேர் கொல்லப்பட்ட நிலையில், மும்பையில் சினிமா சூட்டிங்கில் ஹேமமாலினி பிசியாக இருந்தார். இந்த ஸ்டில்களை டிவிட்டரிலும் அவர் பகிர்ந்திருந்தார்.

மீடியாக்களும், சோஷியல் மீடியாவும் கொந்தளித்ததை தொடர்ந்து, ஹேமமாலினி அந்த டிவிட்டுகளை டெலிட் செய்தார். இந்நிலையில், மதுரா விரைந்த அவரிடம் நிருபர்கள் கேள்விக்கணைகளை தொடுத்தனர். கோபமாக பதிலளித்த ஹேமமாலினி கூறியதாவது:
சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் நான் மதுராவுக்கு வந்துவிட்டேன். இன்னும் முதலமைச்சர் இங்கு வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை. நீங்கள் கேள்வி கேட்க வேண்டியது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய மாநில அரசைத்தானே தவிர, எம்.பியாகிய என்னை கிடையாது.
ஒரு எம்.பிக்கு வேறு பணிகள் இருக்க கூடாதா? நானும் சூட்டிங் பணியில் இருந்தேன். அதில் தவறு கிடையாது. மதுரா கலவரம் பற்றிய தகவல் வந்ததும் சூட்டிங்கை நிறுத்திவிட்டு வந்துள்ளேன்.
நான் மதுராவுக்கு என்ன நலப் பணிகள் செய்துள்ளேன் என்பது மக்களுக்கு தெரியும். அதை உங்களுக்கு (மீடியா) சொல்ல வேண்டிய தேவையில்லை. என்னை எதற்கு சுற்றி வருகிறீர்கள்? 'சில்லி' விஷயங்களில் கவனம் செலுத்தாமல் உண்மையான பிரச்சினையான சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் உங்கள் கவனத்தை வையுங்கள். இவ்வாறு ஹேமமாலினி தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications