"நான் முதல்வர்.. நாட்டை விட்டு ஓடவா போறேன்?".. அமலாக்கத்துறை சம்மன்.. ஹேமந்த் சோரன் 'சுளீர்' கேள்வி
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தை குத்தகை விட்டதில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"நான் ஒரு அரசியல்வாதி. தற்போது முதலமைச்சராக பணியாற்றி வருகிறேன், ஆனால் 'நாட்டை விட்டு ஓடிப்போகும் நபர்' என்கிற ரீதியில் என்னை அமலாக்கத்துறை அணுகுகிறது" என்று விமர்சித்துள்ளார்.
மேலும், "பெரும் பணக்காரர்களை தவிர எந்த அரசியல்வாதியும் நாட்டை விட்டு ஓடி ஒளிந்துகொள்வதில்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.

பாஜக
கடந்த 2019ல் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் ஜார்கண்ட முக்தி மோர்சா கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. முதலமைச்சராக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு இருக்கும் நிலையில், அம்மாநில அரசு தொடர் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அதாவது ஹேமந்த் சோரன் வசம் இருந்த நிலக்கரி சுரங்கத்துறையில் ஊழல் செய்து அதன் மூலம் முறைகேடாக ரூ.1,000 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டியதாக பாஜக குற்றம்சாட்டியது.

குற்றச்சாட்டு
இது குறித்து விசாரித்த தேர்தல் ஆணையம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ல் பிரிவு 9-ஏ மீறப்பட்டிருப்பதாகக்கூறி ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரைத்திருந்தது. இந்த விவகாரத்தில் ஆளுநர் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. ஆனால், இது அனைத்தும் 'ஜார்கண்ட் முக்தி மோர்சா-காங்கிரஸ்' கூட்டணி அரசை சீர்குலைக்கும் பாஜக சதியின் ஒரு அங்கம் என்று ஹேமந்த் சோரன் குற்றம்சாட்டியுள்ளார்.

நான் முதலமைச்சர்
அமலாக்கத்துறை இன்று ஆஜராக சொல்லியிருந்த நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு செல்லுவதற்கு முன்னதாக தன் வீட்டிற்கு முன் கூடியிருந்த கட்சி தொண்டர்களிடையே அவர் உரையாற்றினார். அப்போது மேற்குறிப்பிட்ட கருத்தை அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "நான் முதலமைச்சராக அரசியல் சாசன பதவி வகிக்கிறேன். ஆனால் விசாரணை நடக்கும் விதம், விசாரணைக்கு நான் அழைக்கப்பட்ட விதம் என எல்லாவற்றையும் பார்க்கும்போது நாட்டை விட்டு தப்பியோடுபவர்களை அணுகுவதை போல இருக்கிறது. எனக்கு தெரிந்து தொழிலதிபர்கள்தான் நாட்டைவிட்டு ஓடியுள்ளார்களே தவிர அரசியல்வாதிகள் அல்ல" என்று கூறியுள்ளார்.

கைது
மேலும், "கடந்த 2019 முதல் சதிகாரர்கள் ஆட்சியை கவிழ்க்க நீர்மூழ்கி கப்பலை போல வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெளியில் தலைகாட்ட பயந்தார்கள். தற்போது அவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறார்கள்" என்றும் விமர்சித்தார். முன்னதாக பாஜகவின் குற்றச்சாட்டு தொடர்பாக ஹேமந்த் சோரனின் உதவியாளர்கள் பச்சு யாதவ் மற்றும் பிரேம் பிரகாஷ் ஆகியோரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

சுரங்கம்
முறைகேடு குற்றச்சாட்டை ஹேமந்த் கடுமையாக மறுத்து வருகிறார். அதாவது, "ரூ.1,000 கோடி அளவில் மோசடி செய்ய வேண்டும் எனில் அதற்கு தற்போது உள்ள சுரங்கத்தை விட நான்கு மடங்கு பெரிய நிலக்கரி சுரங்கம் தேவைப்படும். தற்போதுள்ள சுரங்கத்திலிருந்து ரூ.750 கோடிதான் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. எனவே இதைவிட பெரிய சுரங்கம் எதுவும் இங்கு கிடையாது. சரி நீங்கள் சொல்வதை போல பெரிய சுரங்கம் இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும் அதிலிருந்து நிலக்கரியை கொண்டு செல்ல, 20,000 ரயில்வே ரேக்குகள் தேவைப்படும், அல்லது 33 லட்சம் லாரிகள் தேவைப்படும்.

ரயில்வே
இந்த அளவு நிலக்கரிகளை முறையான ஆவணங்கள் இன்றி ரயில்வே துறை கொண்டு செல்லாது. எனவே எந்த ரயில்வே அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தீர்கள்? என் மீது குற்றச்சாட்டு வைக்கும் முன்னர் நீங்கள் எந்த ஆவணங்களையும் சரிபார்க்கவில்லை என்று நினைக்கிறேன்" என கூறியுள்ளார். எம்எல்ஏக்கள் பேரம், நம்பிக்கையில்லா தீர்மானம் தற்போது அமலாக்கத்துறை விசாரணை என ஹேமன் சோரன் தொடர்ந்து சிக்கலை சந்தித்து வருவதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு தீவிரமடைந்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications