For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் ஒரு வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 11 உடல்கள்... பரபர பின்னணி!

டெல்லியில் ஒரு வீட்டில் 11 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லி 11 பேர் தற்கொலை..வீடியோ

    டெல்லி: டெல்லி குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் 11 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

    டெல்லி புராரி குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

    7 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 3 இளவயதினர் உள்பட 11 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்த பரபரப்பு பின்னணி இதோ.

    வட டெல்லியின் புராரி ஏரியாவில் உள்ளது சாந்த் நகர். இங்கு இரண்டடுக்கு மாடி கொண்ட ஒரு வீடு உள்ளது. இதில் 11 பேர் வசித்து வந்தனர். இவர்கள் மளிகை மற்றும் பிளைவுட் பிசினஸ் செய்து வந்தனர்.

    தரையில் ஒரு சடலம்

    இன்று 11 பேரில் 10 பேரின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டன. எஞ்சிய ஒருவரின் உடல் மட்டும் தரையில் கிடந்தது. அவருக்கு 75 வயது இருக்கும். மற்றவர்களின் கண்கள் மற்றும் வாயில் துணியால் கட்டப்பட்டிருந்தன.

    பால் வாங்க சென்றவர் புகார்

    எப்போதும் மளிகை கடை 6 மணிக்கெல்லாம் திறந்துவிடுவர். ஆனால் இன்று 7.30 மணியாகியும் கடை திறக்கப்படவில்லை. மேலும் வீடும் திறந்திருந்தது. கடை சனிக்கிழமை 11.45 மணி வரை திறந்து வைத்துள்ளனர். இது குறித்து பால் வாங்க கடைக்கு சென்றவர் சந்தேகத்தின் பேரில் உள்ளே சென்று பார்த்துவிட்டு போலீஸுக்கு புகார் அளித்தார்.

    போலீஸ் விசாரணை

    அதன் அடிப்படையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் 11பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனரா இல்லை இவர்களை கொலை செய்து யாரேனும் தூக்கில் தொங்கவிட்டனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

    இறந்தவர்களில் வயதான பெண்

    இறந்தவர்களில் வயதான பெண்

    இவர்கள் 11 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே வந்தவர்கள். இறந்தவர்களில் வயதான பெண் ஒருவர், அவரது இரு மகன்கள், அவர்களது மனைவிகள், இரு சிறுவன்கள் 16 முதல் 17 வயது கொண்டவர்கள், மற்ற 4 பெண்கள் ஆகியோராவர்.

    English summary
    Ten bodies were found hanging and blindfolded, while a 75-year-old woman's body was found on the floor. All were from the same family and owned a grocery shop.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X