சசிகலாவுக்கு விஐபி அறை மறுப்பு.. வீட்டுச் சாப்பாடுக்கும் அனுமதி மறுப்பு.. நீதிபதி அதிரடி
பெங்களூர் சிறையில் அடைக்கப்படவுள்ள சசிகலாவுக்கு வீட்டுச் சாப்பாடு தரவும், விஐபி அறை ஒதுக்கவும் நீதிபதி அனுமதி மறுத்து விட்டார்.
பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்படும் சசிகலா தனது விருப்பப் பட்டியல் ஒன்றை சிறை அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தார். இதை மனுவாகவும் இன்று அவரது வக்கீல்கள் நீதிபதியிடம் அளித்தனர். ஆனால் அதில் பல சலுகைகளை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார்.
கிட்டத்தட்ட 3.6 ஆண்டுகளை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில்தான் கழிக்கவுள்ளார் சசிகலா. அவருடன் இளவரசி, சுதாகரனும் சிறையில் கழிக்கவுள்ளனர். இந்த நிலையில் சிறையில் சில வசதிகளை எதிர்பார்த்து அதை மனுவாக தனது வக்கீல்கள் மூலம் நீதிபதியிடம் அளித்தார்.
அவற்றில் பெரும்பாலானவற்றை இன்று நீதிபதி நிராகரித்து விட்டார். சில கோரிக்கைகள் மட்டும் ஏற்கப்பட்டது.

வெஸ்டர்ன் டாய்லெட்
வெஸ்டர்ன் டாய்லெட் வேண்டும் என்று கேட்டிருந்தார் சசிகலா. அதேபோல வீட்டுச் சாப்பாடு தேவை, வாக்கிங் போக இடம் தேவை, 24 மணி நேர தண்ணீர் வசதி தேவை என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இதில் வீட்டுச் சாப்பாடு, வாக்கிங் வசதி நிராகரிக்கப்பட்டு விட்டது. டாய்லெட்டும் ஒத்துக் கொள்ளப்படவில்லை.

கட்டில் டிவி
சசிகலாவுக்கு கட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாம். அதேசமயம், டிவி தரப்படவில்லை என்று தெரகிறது.அவருக்கு ரத்தக் கொதிப்பு,சர்க்கரை நோய் இருப்பதால்தான் கட்டில் வசதியாம். இல்லாவிட்டால்தான் தரைதான் கிடைத்திருக்கும்.

விஐபி அறை கிடையாது
அதேபோல அவர் விஐபி அறையும், ஏசி அறையும் கேட்டிருந்தார். அதுவும் நிராகரிக்கப்பட்டு விட்டதாம். கைதிகளுக்கு சாதாரணமாக ஒதுக்கப்படும் அறைதான் தரப்பட்டுள்ளதாம்.

பாதுகாப்பு வசதி
சசிகலா விஐபி கைதி என்பதால் அவருக்கு சிறையில் பாதுகாப்பும் வழங்கப்படும். 24 மணி நேர பாதுகாப்பு அவருக்குக் கிடைக்கும். முன்பு ஜெயலலிதாவுடன் சேர்ந்து தங்கியிருந்தார். இப்போது ஜெயலலிதா இல்லாமல் தங்கப் போகிறார்.

2வது முறை
பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சசிகலா வருவது இது 2வது முறையாகும். முன்பு ஜெயலலிதாவுடன் இங்கு 21 நாட்கள் தங்கியிருந்தது நினைவிருக்கலாம். தற்போது 3.6 வருட காலம் அவர் தங்கப் போகிறார்.
-
சென்னையில் முடங்கும் ஆட்டோ சேவை? எரிபொருள் இல்லாமல் திணறும் டிரைவர்கள்! பெங்களூரிலும் நிலைமை மோசம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications