தீவிரவாதத்துக்கு எதிரான போரில் ப.சிதம்பரத்தால் இந்தியா பலவீனமடைந்தது: ராஜ்நாத்சிங் பரபரப்பு பேச்சு
டெல்லி: 'இந்து தீவிரவாதம்' என்ற வார்த்தையை பயன்படுத்தி, தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பின்னடைவை ஏற்படுத்திவிட்டார் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். மேலும் தீவிரவாதத்திற்கு மதம், ஜாதி சாயம் பூச தேவையில்லை என்றும் அவர் கோபமாக தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து லோக்சபாவில் இன்று ராஜ்நாத்சிங் அறிக்கை சமர்ப்பித்தார். அப்போது ராஜ்நாத்சிங் கூறியதாவது:

இந்த நாட்டுக்கு தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது. இந்த நாடாளுமன்றமும், நாடும், தீவிரவாதத்தை எதிர்க்கும் விவகாரத்தில் பிளவுபட்ட கருத்தை கொண்டிருக்க கூடாது. தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு உயிரை தியாகம் செய்து வருகின்றனர் நமது ராணுவத்தினர். ஆனால் மற்றொருபுறம் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக சிலர் குரல் கொடுக்கின்றனர். இந்த நாடு இதை இப்படி ஏற்கும்?
இந்த அரசும், நமது பிரதமரும், சவால்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறிக் கொண்டிருந்தபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். தீவிரவாத தாக்குதலுக்கு மத்திய அரசின் தோல்வியே காரணம் என்று அவர்கள் கோஷமிட்டனர்.
இதனால் கோபமடைந்த ராஜ்நாத்சிங் மேலும் கூறியதாவது: கடந்த 2013 ஆம் ஆண்டு அப்போதய உள்துறை அமைச்சராக பதவி வகித்த ப சிதம்பரம், இந்து தீவிரவாதம் என்ற புதிய வார்த்தையை இதே நாடாளுமன்றத்தில் பயன்படுத்தினார். இதனால் தீவிரவாதத்துக்கு எதிரான விசாரணையின் போக்கை அவர் மாற்றிவிட்டார்.
இது தீவிரவாதத்துக்கு எதிரான நமது நாடு மேற்கொண்டுவரும் போரை பலவீனப்படுத்திவிட்டது. இதன் விளைவாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதி ஹபீஸ் சயீத் (லஷ்கர்-இ-தய்பா நிறுவனர்) அப்போதய உள்துறை அமைச்சரை பாராட்டினார். தீவிரவாதம் தீவிரவாதம்தான், அதற்கு மதமோ, ஜாதியோ கிடையாது. இவ்வாறு ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
இந்தியாவில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களை முன்வைத்து, பாகிஸ்தானை சர்வதேச சமூகத்தில் தனித்து வைத்திருக்க இந்தியா மேற்கொண்ட முயற்சியை, ப.சிதம்பரத்தின், உள்நாட்டு தீவிரவாதம் என்ற பேச்சு முறியடித்துவிட்டதாக ராஜ்நாத்சிங் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications