இஸ்லாத்திற்கு மாறாவிட்டால் ஆபாச வீடியோவை வெளியிடுவோம்: இந்து பெண்ணை மிரட்டிய மாமியார், மாமனார்
பாட்னா: பீகாரில் இந்து பெண்ணை மாட்டிறைச்சி சாப்பிட வைத்து இஸ்லாத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்திய 2 முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த இந்து பெண் ஒருவர் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள புல்வாரி பகுதியை சேர்ந்த முஸ்லீமான ஆசிப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவரது மாமனார், மாமியார் அவரை கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிட வைத்துள்ளனர்.

மேலும் அவரை இஸ்லாத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அந்த பெண் இது குறித்து தனது கணவர் ஆசிப் மற்றும் அவரது குடும்பத்தார் மீது காந்தி மைதானம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் தனது புகாரில் கூறியிருப்பதாவது,
இஸ்லாத்திற்கு மாறுமாறு எனது கணவரும், அவரது குடும்பத்தாரும் என்னை கொடுமைப்படுத்தி வருகிறார்கள். என்னை கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிட வைத்தார்கள். மேலும் இஸ்லாத்தை கற்றுக் கொள்ள என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மதரஸாவில் ஒரு மாதம் தங்க வைத்தனர்.
இஸ்லாத்திற்கு மாறவில்லை என்றால் என்னுடைய ஆபாச வீடியோக்களை வெளியிடப் போவதாக என் கணவரின் குடும்பத்தார் மிரட்டுகிறார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிப் குடும்பத்தார் இரண்டு பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications