கர்நாடகாவின் ஷிவமோகாவில் இந்து ஆர்வலர் படுகொலையால் வன்முறை, பதற்றம்
Click here to see the BBC interactive
கர்நாடகாவின் ஷிவமோகா நகரில் இந்து ஆர்வலர் படுகொலையில் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் நேற்றிரவு 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது இறுதி ஊர்வலத்தின் போது கூட வன்முறையும், தீயிடலும் நிகழ்ந்துள்ளன.
நேற்று முன்தினம் இரவு 26 வயதான ஹர்ஷா சீகஹள்ளியில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியே சென்றபோது, சில நபர்களால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவுகளை விதித்தது. அவர் சில காலத்திற்கு முன்பு தாக்கப்பட்டார், ஆனால் அந்த நேரத்தில் அவர் சிறிய காயங்களுடன் தப்பினார் என்று மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார். எனக்கு கிடைத்த தகவலின்படி, இந்தக்கொலையில் 5 பேர் சம்மந்தப்பட்டுள்ளனர்," என்று ஞானேந்திரா செய்தியாளர்களிடம் கூறினார்.
- காவித் துண்டு "போராட்டம் அல்ல, ஹிஜாபுக்கு எதிர்வினை" - உடுப்பியில் இருந்து கள நிலவரம்
- சாமியார்களின் சர்ச்சை பேச்சு - இரு காவல்துறையின் மாறுபட்ட அணுகுமுறை
- மதமாற்ற விவகாரம்: பாஜக தமிழ்நாட்டில் கையாளும் ஆயுதமா? அரசியலா? என்ன நடக்கிறது?
இது பழைய பகையா அல்லது அரசியல் கொலையா என்பது எங்களுக்குத் தெரியாது. இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்த நேரத்தில், கூடுதல் விவரங்களை வெளியிடுவது விவேகமற்ற செயலாகும். நீங்கள் எங்களிடம் கேட்கும் அதே கேள்விகளை நாங்கள் அவர்களிடம் கேட்போம்,'' என்று பெயர் வெளியிட விரும்பாத மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
ஷிவமோகாவில் ஹர்ஷா இறந்த செய்தி பரவியதையடுத்து, சில பகுதிகளில் கல் வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததாக செய்திகள் வந்தன. போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையால் நிலைமை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் நேற்று நண்பகலில் ஹர்ஷாவின் இறுதி ஊர்வலத்தின்போது மீண்டும் வன்முறை வெடித்தது.
இறுதி ஊர்வலத்த்தை மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ஆட்சி அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா முன்னின்று நடத்தினார். அவர் முன்னதாக எங்கள் தொண்டர் ஹர்ஷாவின் கொலைக்கு 'முஸ்லிம் குண்டர்கள்' தான் காரணம் " என்று குற்றம் சாட்டியிருந்தார். இதுபோன்ற ரெளடித்தனத்தை மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.
பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இறுதி ஊர்வலம் நகருக்குள் சென்றபோது , சில பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் குடியிருப்புகள் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், சில வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது மாநிலத்தில் நிலவும் ஹிஜாப் சர்ச்சைக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்றும் உள்துறை அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
இந்த கொலையால் ஈஸ்வரப்பாவுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே சொற்போர் நடக்கிறது. ஹர்ஷாவை கொலை செய்ய குண்டர்களை தூண்டியதாக சிவகுமார் மீது ஈஸ்வரப்பா குற்றம் சாட்டினார். ஈஸ்வரப்பா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சிவகுமார் கூறினார்.
செங்கோட்டையில் மூவர்ணக்கொடிக்கு பதிலாக 'காவிக்கொடி' பறக்கும் என்று கூறிய ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்யக் கோரி, கடந்த சில நாட்களாக சட்டசபையிலும், மேலவையிலும் காங்கிரஸ் தர்ணா நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஈஸ்வரப்பாவுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை ஆதரவாக உள்ளார்.
வெள்ளிக்கிழமை முதல் மாநில சட்டப்பேரவையின் இரு அவைகளின் வராந்தா தரைகளில் படுத்து உறங்கி காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீர் கைது - என்ன நடந்தது?
- 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர்
- ஆடுகளை வரைவதில் அலாதி இன்பம்: ஓவியர் என்.எஸ்.மனோகரன்
- 'அரை நிர்வாண தாக்குதல்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீடியோவால் சர்ச்சை
- யோகி ஆதித்யநாத் அரசு விவசாயிகளுக்குச் செய்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா?
- "என்னுடைய நிர்வாணப் படங்களை டெலிகிராம் நீக்காதது ஏன்?"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்















Click it and Unblock the Notifications