மும்பையில் பயங்கரம்... கார் விபத்தில் சிக்கிய பெண் பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்!
மும்பை: மும்பையில் நடந்த ஒரு சாலை விபத்தில் காரில் சிக்கிக் கொண்ட ஒரு பெண், பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த விபத்து டிசம்பர் 8ம் தேதி காலை 6 மணிகத்கு நடந்துள்ளது.

மும்பையின் கோரேகான் பகுதியில் விபத்து நடந்துள்ளது. சம்பவத்தின்போது ஒரு பெண் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது ஒரு கார் அவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்தப் பெண் காரில் சிக்கிக் கொண்டார். ஆனாலும் கார் நிற்கவில்லை. மாறாக படு வேகமாக போயுள்ளது. அந்தப் பெண்ணும் பல அடி தூரத்திற்கு காருடன் சேர்த்து இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அதன் பின்னர்தான் அந்தப் பெண் காரிலிருந்து பிரிந்து விழுந்துள்ளார். அப்போதும் கார் நிற்கவில்லை. வேகமாக போய் விட்டது. அப்பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பாட்டார். தொடர்நது அவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தை ஏற்படுத்திய கார் அதன் டிரைவர் குறித்த விவரம் இதுவரை போலீஸாருக்குத் தெரியவில்லையாம்.












Click it and Unblock the Notifications