ஏடிஎம்-ல் பணம் கிடைக்கவில்லை.. கணவருக்கு பயந்து பெண் தற்கொலை!
ஏடிஎம்-ல் பணம் கிடைக்காத விரக்தியில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
ஹவுரா: மேற்கு வங்க மாநிலத்தில் ஏடிஎம்-ல் பணம் கிடைக்காததால் கணவருக்கு பயந்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹவுராவின் பெலூர் பகுதியைச் சேர்ந்தவர் மது திவாரி (வயது 27). அவரை ஏடிஎம்-ல் பணம் எடுக்க வரிசையில் நிற்குமாறு கணவர் பிரஜேஸ் கூறியுள்ளார்.

அத்துடன் பள்ளியில் இருந்து குழந்தையை கூட்டி வந்த பிறகு உனக்கு பதிலாக நான் வரிசையில் நிற்கிறேன் எனவும் கணவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் அப்பகுதியில் உள்ள ஏ.டி.எம். பூட்டி இருந்ததாம்.
பணம் இல்லாமல் வீட்டுக்கு போனால் கணவருடன் பிரச்சனை ஏற்படுமே என பயந்து பால்கனியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாராம் மது திவாரி.
இச்சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications