பெயர் இல்லை.. பெரும்பான்மையும் இல்லை.. எப்படி எடியூரப்பாவை அழைத்தீர்கள்.. நீதிபதிகள் காரசாரம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பதவியேற்புக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை- வீடியோ

    டெல்லி: ஆட்சி அமைக்க உரிமை கோரி எடியூரப்பா ஆளுநரிடம் கொடுத்த கடிதத்தில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை, அந்த நிலையில் ஆளுநர் ஏன் அவரை ஆட்சி அமைக்க அழைத்தார் என்று நீதிபதிகள் காரசாரமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

    கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷண, பாப்தே பெஞ்ச் விசாரணை நடத்துகிறது இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

    How Governor invited BJP to form the government ask Judges in SC

    இக்கடிதங்களை பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி இன்று தாக்கல் செய்தார். எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதிகள் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை. மே 15-ம் தேதி ஆளுநரிடம் தாக்கல் செய்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் கடிதங்களின் நகல்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

    இது பற்றி நீதிபதிகள் மூன்று பேரும் காரசாரமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். முக்கியமாக எடியூரப்பா சமர்ப்பித்த இரண்டு கடிதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு கடிதங்களை கொடுத்துத்தான் எடியூரப்பா ஆளுநர் வஜூபாய் மூலம் பதவிப் பிரமாணம் செய்தார். இந்த கடிதம் தான் தற்போது பெரும் பிரச்னையை உருவாக்கி உள்ளது.

    இந்த கடிதம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதில் ஏன் எந்தெந்த எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தார்கள் என்ற விளக்கம் கொடுக்கப்படவில்லை. எந்த அடிப்படையில் இந்த கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

    இதில் ஒருவர் பெயரும் இல்லை, 105 எம்எல்ஏக்கள் ஆதரவுதான் இருக்கிறது, எப்படி பாஜகவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்தார். அவர்கள் எந்த பெரும்பான்மையை ஆளுநரிடம் காட்டினார்கள். எந்த விவரமும் இந்த கடிதத்தில் கொடுக்கப்படவில்லை. இதை எப்படி ஆளுநர் ஏற்றுக்கொண்டார் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

    முக்கியமாக எடியூரப்பாவிடம் பெரும்பான்மை இல்லை, ஆனால் மஜத காங்கிரஸ் கட்சியிடம் பெரும்பான்மை இருக்கிறது. ஆளுநர் அவர்களைத்தான் அழைத்து இருக்க வேண்டும். ஆளுநர் எப்படி பாஜகவை அழைக்க முடியும், அவரே பாஜகவிற்கு பெரும்பான்மை இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாரா என்று கோபமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+