சல்மான்கான் ஜாமீன் கேசுக்கும், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கிற்கும் ஒரு தொடர்புள்ளதே..!
மும்பை: காரை வைத்து மோதி ஒருவரை கொன்று, நான்குபேர் காயமடைய காரணமாக இருந்ததாக பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு நான்காண்டு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்தது மும்பை செசன்ஸ் கோர்ட். இதையடுத்து அவர், சிறையில் அடைக்கப்பட தேவையான ஆயத்தங்கள் தொடங்கின.
இந்நிலையில், மும்பை ஹைகோர்ட்டில் சல்மான்கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்றே விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, சல்மான்கான் தரப்பில் மூத்த குற்றவியல் வழக்கறிஞரான ஹரீஷ் சால்வே, ஆஜரானார்.

செசன்ஸ் கோர்ட் தீர்ப்பு நகல் முழுமையாக வரும் முன்பே, குற்றவாளியை சிறையில் அடைக்க வேண்டிய தேவை கிடையாது. எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் வாதிட்டார். இதையடுத்து கோர்ட் சல்மான்கானுக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த ஹரீஷ் சால்வே, ஜெயலலிதாவுக்காகவும் வாதாடியவர் என்பது பலருக்கு மறந்திருக்கலாம்.
கடந்த 2011ம் ஆண்டு கர்நாடக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு செய்திருந்தார். அந்த வழக்கில் ஹரீஷ் சால்வேதான் ஆஜரானார். ஆனால் அப்போது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதா பெங்களூர் கோர்ட்டில் நேரில் ஆஜராகியே தீர வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை கிடைத்த பிறகு, ஹைகோர்ட்டில், அவருக்காக ராம்ஜெத்மலானி ஆஜரானார். ஆனால், அரசு வக்கீல் பவானிசிங், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கலாம் என்று சம்மதித்தும்கூட, ஜாமீன் மனு தள்ளுபடியானது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு ஜாமீனுக்காக மேல்முறையீடு செய்தபோது, ராம்ஜெத்மலானியை கழற்றிவிட்டு, ஹரீஷ் சால்வேயை நாடினர். ஆனால், அப்போது அவர் வெளிநாட்டில் இருந்ததால், பாலிநாரிமன், ஜெயலலிதாவுக்காக ஆஜராகினார். ஜாமீனும் பெற்றுத்தந்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications