For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முன்பே திட்டமிட்டனர்.. வன்புணர்வு முதல் கொலை வரை.. காஷ்மீர் சிறுமி கொடூரத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்கள்!

காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி ஒருவர் 7 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீரில் ஆசிஃபா என்ற சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை

    காஷ்மீர்: காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி ஒருவர் 7 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இந்த கொலை சம்பவமும், அந்த சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டது பற்றி தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 18 பக்கம் கொண்ட இதில் பல திடுக்கிடும் தகவல்கள் இருக்கிறது.

    அதில் இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம், மற்றும் முதல் குற்றவாளி என்று முன்னாள் அரசு அதிகாரி சாஞ்சி ராம் பெயர் இடம்பெற்றுள்ளது. வழக்கில் இரண்டு சிறுவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    திட்டமிட்டார்கள்

    திட்டமிட்டார்கள்

    சிறுமி காட்டுப்பகுதியில் குதிரை மேய்ப்பதை பலமுறை சாஞ்சி ராமும் அவரது மகன் விஷால், அவனின் நண்பன் பர்வேஷ் ஆகியோர் கவனித்து இருக்கிறார்கள். அப்போது கடந்த ஜனவரி 10ம் தேதி அந்த சிறுமியை பின்தொடர்ந்து கடத்தி இருக்கிறார்கள். முதலில் குஜ்ஜார் இன மக்களை பயமுறுத்த இப்படி செய்துள்ளனர். கடைசியில் அந்த சிறுவர்களின் விருப்பப்படி பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

    தெரியும்

    தெரியும்

    இந்த வழக்கை முதலில் விசாரித்து, இப்போது கைது செய்யப்பட்டு இருக்கும் தீபக் காஜூரியா என்ற போலீஸுக்கு அந்த சிறுமி எங்கே மறைத்து வைக்கப்பட்டு இருந்தார் என்று முன்பே தெரியும். இதை வெளியே சொல்ல கூடாது என்று லஞ்சமாக 1.5 லட்சம் பணம் அவருக்கு சாஞ்சி ராம் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இவரும் அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மருந்து

    மருந்து

    எல்லா முறையும் சிறுமிக்கு கொடூரமான மயக்க மருந்து கொடுத்து வன்புணர்வு செய்துள்ளனர். இதை வாங்கி வந்ததே அந்த சிறுவர்கள்தான். அவர்களில் ஒருவனின் தாத்தாவிற்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கும் மயக்க மருந்துகளை தினமும் கொண்டு வந்து, 4 நாட்கள் கோவிலில் வைத்து சிறுமியை வன்புணர்வு செய்து இருக்கிறார்கள்.

    கடைசி

    கடைசி

    சிறுமியை தீபக் காஜூரியா கடைசியாக கொலை செய்ய சென்ற போது சிறுவன் விஷால் அவர்களை தடுத்துள்ளான். கடைசியாக சிறுமியை கொலை செய்யும் முன் ஒருமுறை வன்புணர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளான். இந்த நிலையில் மீண்டும் வன்புணர்வு செய்துவிட்டு, பின்தான் அந்த சிறுமியை கொலை செய்ய முடிவெடுத்து இருக்கிறார்கள்.

    சிறுவன்தான்

    சிறுவன்தான்

    அந்த சிறுமியின் கழுத்தை அழுத்தி தீபக் காஜூரியா கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் அதில் சிறுமி மரணம் அடையவில்லை. இதனால் அந்த விஷால் என்ற சிறுவன், சிறுமியின் கழுத்தை திருப்பி கொலை செய்துள்ளான். கடைசியாக தலையில் கல்லால் அடித்து மரணம் அடைந்ததை உறுதி செய்து இருக்கிறான்.

    English summary
    An 8-years old Kashmiri Muslim girl brutally raped and killed by 7 Hindutuva groups, in which 4 of them are police. BJP keeping their bad role in this issue. Kashmir girl child has killed inside a Hindu temple, she has been tortured for 5 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X