பெங்களூரில் தற்காலிக போலீஸ் ஸ்டேஷன்களாக மாறியுள்ள 'ஹொய்சாலா' #bengaluru
பெங்களூர்: பெங்களூரில் ரோந்து வாகனங்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டுள்ளன. அவைதான் பொதுமக்களுக்கு அவசர காலத்தில் உதவும் நண்பர்களாக மாறியுள்ளன.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் கன்னடர் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்களால் பெங்களூரில் நேற்று கன்னட அமைப்பினர் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட தமிழக பதிவெண் வாகனங்கள் தீக்கிரையாகின. அடையார் ஆனந்தபவன், பூர்வீகா போன்ற தமிழக நிறுவனங்கள் பெங்களூரில் அடித்து நொறுக்கப்பட்டன.

இதையடுத்து மாலையில் 144 தடையுத்தரவு பெங்களூரில் அமல்படுத்தப்பட்டது. கலவரம் தொடர்ந்ததால், 16 காவல் நிலைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஹொய்சாலா எனப்படும் ரோந்து போலீஸ் ஜீப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவசர உதவி தேவைப்படுவோர் 100 என்ற காவல்துறை தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவசர தேவைக்கு 9480801000 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.












Click it and Unblock the Notifications