உடலை வருத்தி உழைத்தாவது மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: உடலை வருத்தி உழைத்தாவது கணவர் தன்னை விட்டுப் பிரிந்த மனைவிக்கு உரிய ஜீவனாம்சத்தை கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, வி. கோபால கவுடா அடங்கிய பெஞ்ச் கூறுகையில்,
பிரிந்து சென்ற மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்குவது கணவனின் கடமை ஆகும். பிரிந்து சென்ற மனைவி பணத்திற்கு வழியில்லாமல் பிச்சை எடுக்காதபடி கணவன்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். கணவனின் வீட்டை விட்டு வந்து தவிக்கும் பெண்களின் துயரை புரிந்து கொண்டு விவாகரத்து, ஜீவனாம்சம், குழந்தை பொறுப்பு, சொத்து உள்ளிட்ட வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க வேண்டும்.

கணவர் நல்ல ஆராோக்கியத்துடன் இருந்து தனது உடலை வருத்தி சம்பாதிக்க வேண்டியதாக இருந்தாலும் அவர் பிரிந்த மனைவிக்கு பணம் கொடுக்க வேண்டும். மனைவிக்கு கணவன் பணம் கொடுக்க வேண்டியது இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே கணவர் பணம் அளிக்க வேண்டியது இல்லை.
இல்லை எனில் கணவரின் வீட்டில் இருந்தால் அந்த பெண் எப்படி இருந்திருப்பாரோ அப்படி வசதிகளுடன் வாழும் அளவுக்கு அவருக்கு கணவர் பணம் கொடுக்க வேண்டும். கணவரின் சமூக நிலைமையை பார்த்து அவர் மனைவிக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications