பல ஆண்களுடன் தொடர்பு.. மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்த கணவர்!
மேற்குவங்கத்தில் பாரில் நடனமாடி வந்த மனைவி பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
கொல்கத்தா : மேற்குவங்க மாநிலம் உல்காஸ் நகர் பகுதியில் பாரில் நடனமாடிய மனைவிக்கு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கணவர் அவரை கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.
உல்காஸ் நகரை அடுத்த விதல்வாடி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கான் என்பவரின் மனைவி ஜமீலா. இவர் அங்குள்ள பார் ஒன்றில் நடனமாடி வந்தார். அப்போது அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனை ராஜேஷ் கான் பல முறை கண்டித்தும் ஜமீலா தொடர்பை கைவிடுவதாக தெரியவில்லை.

இதுதொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகாராறில் ஆத்திரமடைந்த ராஜேஷ்கான் ஜமீலாவை சாகும்வரை கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து உடலை சூட்கேசில் அடைத்த ராஜேஷ் கான் சடலத்தை மறைக்க அவரது நண்பர் சபிபுல்லாவின் உதவியை நாடியுள்ளார்.
ஆனால் அதிர்ச்சி அடைந்த அவர் உதவி செய்ய மறுத்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து ராஜேஷ்கானின் வீட்டிற்கு வந்த போலீசார் அவர் வீட்டில் இல்லாததைக் கண்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
அவரது செல்போனை ட்ரேஸ் செய்த போலீசார் அந்த எண் ஹவுராவில் இருந்து அவரது சொந்த ஊரான முர்ஷிதாபாத் செல்லும் வழியில் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் செல்போன் சிக்னலை வைத்து ராஜேஷ்கானை கைது செய்தபோலீசார் அவர் சூட்கேசில் அடைத்து தூக்கிச் சென்ற ஜமீலாவின் உடலையும் கைப்பற்றினர்.












Click it and Unblock the Notifications