For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நள்ளிரவில் வேனில் லிப்ட் ... நெடுஞ்சாலையில் கணவனை கட்டிப் போட்டு மனைவி பலாத்காரம்!

உத்தரப் பிரதேச தேசிய நெடுஞ்சாலையில் கணவனை கட்டி போட்ட 8 பேர் கொண்ட கும்பல் அவரது மனைவியை பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ஜான்சி: உத்தரப் பிரதேச தேசிய நெடுஞ்சாலையில் கணவனை கட்டி போட்ட 8 பேர் கொண்ட கும்பல் அவரது மனைவியை பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்த்தின் ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்த கைவினைகலைஞர்களான தம்பதி, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து ஜலான் பகுதிக்கு வியாழக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனர்.

Husband tied up, woman raped by 8 on UP highway

அப்போது ஆரையா பகுதியை ரயில் மூலம் நள்ளிரவில் வந்தடைந்தனர். பின்னர் ஜலான் பகுதிக்கு செல்ல பேருந்துக்காக தம்பதி காத்து கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த சரக்கு வேன் டிரைவர் லிப்ட் தருவதாக கூறி தம்பதியை அழைத்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் பேருந்து வராததால் அந்த வேனில் இருவரும் ஏறினர். பின்னர் சிறிது தூரத்தில் உள்ள மதுபான கடையில் வேன் நின்றது. அங்கிருந்த 7 பேரும் வேனில் ஏறினர். பின்னர் வேனை ஆள் அரவம் இல்லாத இடத்துக்கு ஓட்டி சென்றனர்.

அங்கு கணவரை கட்டிப் போட்டுவிட்டு அந்த 8 பேரும் அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர். பின்னர் இருவரையும் கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து 8 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ஜலான் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த பெண், மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டார்.

English summary
Eight men allegedly gang-raped a woman before her husband in a vehicle on Thursday night in Jalaun district. The couple was then robbed and dumped on Auraiya-Jalaun highway.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X