நானும் மனிதன் தான்... தவறுகள் செய்திருப்பதை ஒத்துக் கொள்கிறேன்: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் உட்பூசலை சரி செய்ய அக்கட்சியில் நிறைய மாற்றங்கள் செய்யப் பட உள்ளதாக அறிவித்துள்ள அக்கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால், சாதாரண மனிதனான தானும் நிறைய தவறுகள் செய்திருப்பதாகக் கூறியுள்ளார்.
கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறைந்த காலத்திலேயே டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு மக்களிடையே செல்வாக்கைப் பெற்றது ஆம் ஆத்மி கட்சி. ஆனால், அதற்குப் பிந்தைய அக்கட்சியின் நடவடிக்கைகள் சொல்லிக் கொள்ளும் விதத்தில் இல்லை. இதனால் மக்களுக்கு அக்கட்சி மீது அதிருப்தி உண்டானது.

இதனை வெளிக்காட்டும் விதமாக அமைந்திருந்தது சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தல். அதுபோக, கெஜ்ரிவால் சென்ற இடங்களிலெல்லாம் பிரச்சினை அவரைப் பின் தொடர்ந்தது. பல இடங்களில் அவர் தாக்கவும் பட்டார்.
இதற்கிடையே அவரது கட்சிக்குள்ளும் உட்கட்சிப் பூசல் உண்டானது. பல முக்கியத் தலைவர்கள் அதிரடியாக பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்கள்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூன்று நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் யோகேந்திர யாதவ் மற்றும் சாஷியா இல்மியின் ராஜினாமாவை நிராகரிப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆம் ஆத்மி கட்சித் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால். அப்போது அவர் கூறியதாவது :-












Click it and Unblock the Notifications