நான் நல்ல நலமுடன் இருக்கிறேன்: சரத் பவார் டுவிட்டரில் தகவல் !
மும்பை: உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தாம் நல்ல நலமுடன் இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இறந்து விட்டதாக வைரலாக ஒரு செய்தி பரவியது.

மேலும் நாட்டின் 67 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டதைத் ஒட்டி இந்த தகவல் தெரிவிக்கப்படாமல் இருந்ததாகவும் வதந்தி பரவியது. இதையடுத்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் சுனில் தத்கரே நேற்று மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சரத் பவாருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக புணே மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது நலமாக உள்ளார்.
மருத்துவமனையில் இருந்து புதன் அல்லது வியாழக்கிழமை வீடு திரும்புவார். பிறகு, அவர் வழக்கம்போல் தனது பணிகளை மேற்கொள்வார் என்றார் சுனில் தத்கரே
இதனிடையே, தான் நல்ல நலமுடன் இருப்பதாக சரத் பவார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில், "நான் நலமாக இருக்கிறேன். நீங்கள் (மக்கள்) செய்யும் பிரார்த்தனைகளுக்கு நன்றி' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
I am well and perfectly fine. Thank for your good wishes.
— Sharad Pawar (@PawarSpeaks) January 26, 2016 











Click it and Unblock the Notifications