உத்தரகாண்ட் பேரழிவால் திட்டங்கள் அனுமதிக்கு அச்சம் இருந்தது உண்மைதான்..: ஜெயந்தி நடராஜன் தகவல்
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேரழிவினால் மின் திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கொடுப்பதில் அச்சம் ஏற்பட்டது உண்மைதான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.
தொழில் திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் அமைச்சகம் உரிய காலத்தில் அனுமதி வழங்காததால் மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து ஜெயந்தி நடராஜன் விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இதை நிராகரித்துள்ள ஜெயந்தி நடராஜன், தொழில் திட்டங்க ளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் கால தாமதம் செய்ததாக கூறப்படுவதை ஏற்க முடியாது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு அணைகள் மற்றும் நீர்மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்கு வதில் நான் அச்சப்பட்டது உண்மை.

இதில் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் இருப்பதால் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும். மொத்த வளர்ச்சித் திட்டங்களில் 8% மட்டுமே மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் அனுமதிக்கு வந்தன. 92% திட்டங்களுக்கு அந்தந்த மாநில அரசுகளே அனுமதி அளித்துள்ளன. எனது துறையில் எந்தத் திட்டமும் நிலுவையில் இல்லை. அனுமதி வழங்கும் நடைமுறை வெளிப்படையானது. மனு எந்த நிலையில் இருக்கிறது என்பதை இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றார்












Click it and Unblock the Notifications